அண்மைய செய்திகள்

recent
-

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழு மீளாய்வுக் கூட்டம் ஆரம்பம்....


கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழு மீளாய்வுக் கூட்டம் இன்று காலை 9.30 மணியளவில் ஆரம்பமாகியுள்ளது.

கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்று வரும் இந்த கூட்டத்தில்,

அபிவிருத்திக் குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றனவா? இல்லையெனில் ஏன், எதற்காக என ஆராயப்படுகின்றது.

அத்தோடு நகரத் திட்டமிடல், கரும்பு மற்றும் இறப்பர் உற்பத்தி பற்றி கவனத்தில் எடுக்கப்பட்டதுடன், மாவட்டத்தில் தனியார் – அரச பேரூந்து நிலையம் அமைத்தல், கலாச்சார மண்டபம் அமைத்தல் தொடர்பாக முக்கிய கவனம் செலுத்தி கலந்துரையாடப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த கூட்டத்தில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் , மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான அங்கயன் இராமநாதன், சி.சிறீதரன் மற்றும் திணைக்களங்களின் தலைவர்கள் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

எனினும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் ஆகியோர் சமூகமளித்திருக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழு மீளாய்வுக் கூட்டம் ஆரம்பம்.... Reviewed by Author on May 07, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.