அண்மைய செய்திகள்

recent
-

பிரான்ஸில் நகரபிதா நாட்டிய தமிழினப் படுகொலையின் நீதிக்கான மரம்!



பிரான்சின் ஆர்ஜொந்தெய் நகரசபை, முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையினை நினைவேந்தும் நீதிக்கான மரத்தினை மே-18 தமிழீழத் தேசிய துக்க நாளில் நாட்டியது.

ஆர்ஜொந்தெய் அவர்கள் ஜோர்ச் மொத்ரொன் Georges Mothron அவர்கள் நகரபிதா நீதிக்கான மரத்தினை நாட்டி வைத்து ஈழத்தமிழர்களுக்களின் நீதிக்கான போராட்டத்துக்கான தனது தோழமையினை வெளிப்படுத்தினார்.

ஆர்ஜொந்தெய் தமிழர் இல்லத்தின் ஒருங்கிணைப்பில் இடம்பெற்றிருந்த இந்த உணர்வுபூர்வமான நிகழ்வில் நகரசபைத் பிரதிநிதிகள், தமிழ் அரசியல் சமூகப் பிரதிநிதிகள் என பலரும் பங்கெடுத்திருந்தனர்.

இந்நிகழ்வினை தொகுத்து வழங்கியிருந்த நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அமைச்சர் சுதன்ராஜ் அவர்கள், இழந்த ஒவ்வொரு உயிருக்கும் ஒவ்வொரு மரம் என்ற வகையில், உலகெங்கும் நாட்டப்பட்டு வரும் ஒரு லட்சம் இலக்கினைக் கொண்ட நீதிக்கான மர நடுகையின் அங்காக முள்ளிவாய்க்கால் நினைவு நாளில் பிரான்ஸ் நகரசபை ஒன்றின் அங்கீகாரத்துடன் இம்மரம் நாட்டப்பட்டுள்ளமை மிக முக்கியமான நிகழ்வு எனத் தெரிவித்திருந்தார்.

பல அரசியல் பிரதிநிதிகள் இனப்படுகொலை எனச் சொல்வதற்கு தயங்கி நிற்கும் இவ்வேளையில், தமிழர்களுக்கு நடந்தது இனப்படுகொலை என்பதனை அங்கீகரித்து நகரசபையின் பூங்காவிலேயே இம்மரத்தினை நாட்டியுள்ள இந்த நகரசபைக்கும் நகரபிதாவுக்கும் நன்றியினைத் தெரிவித்துக் கொள்வதாக துணை அமைச்சர் மகிந்தன் தனது தொகுப்புரையில் தெரிவித்திருந்தார்.

தமிழர் இல்ல சங்கப் பிரதிநிதி சிவா அவர்கள், ஆர்ஜொந்தெய் வாழ் தமிழர்களின் சார்பில் நகரசபைக்கு நன்றியினைத் தெரிவித்திருந்தார்.

நகரபிதா அவர்கள் மரத்தினை நாட்டியிருந்ததோடு, நினைவேட்டினையும் திறந்து வைத்திருந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

பிரான்ஸில் நகரபிதா நாட்டிய தமிழினப் படுகொலையின் நீதிக்கான மரம்! Reviewed by Author on May 19, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.