அண்மைய செய்திகள்

recent
-

மடு கல்வி வலயத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகளை வழங்கி வைத்தார் பிரிமூஸ் சிறாய்வா.(படம்)


யுத்தத்தினால் பாதீக்கப்பட்டு மீள் குடியேற்றம் செய்யப்பட்டுள்ள மடு கல்வி வலயத்தில் கல்வி கற்கும் மாணவர்களின் போக்கு வரத்து வசதியை கருத்தில் கொண்டு தெரிவு செய்யப்பட்ட 10 மாணவ,மாணவிகளுக்கு வடமாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.பிரிமூஸ் சிறாய்வா தனது நிதி ஒருக்கீட்டில் கொள்ளவனவு செய்யப்பட்ட துவிச்சக்கர வண்டிகளை நேற்று வழங்கி வைத்தார்.

மடு கல்வி வலய விளையாட்டுப்போட்டியில் கலந்து கொண்டு குறித்த துவிச்சக்கர வண்டிகளை தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு வழங்கி வைத்தார்.

மடு கல்வி வலயத்திற்குற்பட்ட பாடசாலைகளில் கல்வி கற்கும் வறிய மாணவர்கள் 10 பேர் தெரிவு செய்யப்பட்ட நிலையில் அவர்களுக்கு போக்கு வரத்து வசதியை மேம்படுத்தும் வகையில் குறித்த துவிச்சக்கர வண்டிகளை வடமாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.பிரிமூஸ் சிறாய்வா வழங்கி வைத்தார்.

குறித்த நிகழ்வில் மடு பிரதேசச் செயலாளர் எப்.சி.சத்தியசோதி,மடு வலயக்கல்விப்பணிப்பாளர் உற்பட பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.



மன்னார் நிருபர்

(7-05-2016)







மடு கல்வி வலயத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகளை வழங்கி வைத்தார் பிரிமூஸ் சிறாய்வா.(படம்) Reviewed by NEWMANNAR on May 07, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.