அண்மைய செய்திகள்

recent
-

முசலி பிரதேசச் செயலாளர் பிரிவில் தென்பகுதி மீனவர்களுக்கு தொழில் செய்ய மாற்றிடம் கொடுத்து குடியேற காணியும் வழங்க நடவடிக்கை-.Photos

மன்னாரில் கடல் தொழிலில் ஈடுபட்டு வரும் தென்பகுதி மீனவர்களுக்கு மன்னாரில் தொழில் செய்ய மாற்றிடம் கொடுத்து அவர்களுக்கு குடியேற காணியும் வழங்கி குடியேற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசும்,அதிகாரிகளும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றமையினை ஏற்றுக்கொள்ள முடியாது என வடமாகாண கடற்தொழிலாளர் இணையத்தின் தலைவர் என்.எம். ஆலம் தெரிவித்துள்ளார்.

மன்னார் மாவட்ட கிராமிய மீனவ சம்மேளனம் மற்றும் மன்னார் மாவட்ட மீனவ கூட்டுறவு சமாசம் ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்த விசேட கலந்துரையாடல் இன்று திங்கட்கிழமை கலை 10.30 மணியளவில் மன்னார் மாவட்ட கடற்தொழில் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.

இதன் போது கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,,,,

மன்னாரில் கடல் தொழிலில் ஈடுபட்டு வரும் தென்பகுதி மீனவர்களுக்கு மன்னாரில் தொழில் செய்ய மாற்றிடம் கொடுத்து அவர்களுக்கு குடியேற காணியும் வழங்கி குடியேற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசும்,அதிகாரிகளும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றமை தெரிய வந்துள்ளது.

குறித்த நடவடிக்கைகளினால் மன்னார் மாவட்ட மீனவர்கள் கொதிப்படைந்துள்ளனர்.சிலாபத்துறை மற்றும் முள்ளிக்குளம் போன்ற பகுதிகளில் உள்ள தனியார் மற்றும் அரச காணிகளில் அரச படையினர் சுற்றி வளைத்து முகாம்களை அமைத்துள்ள நிலையில் குறித்த காணிகள் இன்று வரை விடுவிக்கப்படவில்லை.

-இந்த நிலையில் தென்னிலங்கையினைச் சேர்ந்த(நீர்கொழும்பு) மீனவர்களை முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட பகுதியில் மீள் குடியேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்வது என்பது மன்னார் மாவட்ட மீனவர்களை மிகவும் வேதனைக்குள்ளாக்கியுள்ளது.

மன்னார் மாவட்டத்தில் உள்ள மீனவர்கள் பல தேவைகளுடன் உள்ளனர்.அவர்கள் கடந்த காலங்களில் பல்வேறு பிரச்சினைகளையும்,விடையங்களையும் வெளிக்கொண்டு வந்துள்ளனர்.

குறிப்பாக தென்னிலங்கை மீனவர்கள் மன்னார் கடற்பரப்பில் மேற்கொண்டு வரும் சட்ட விரேத மீன் பிடி நடவடிக்கைகள் மற்றும் அவர்களின் மித மிஞ்சிய வருகை போன்ற நடவடிக்கைகள் மன்னார் மாவட்ட மீனவர்களுக்கு தொல்லை கொடுக்கும் செயற்பாடாக அமைந்துள்ளது.

குறித்த பிரச்சினைகள் குறித்து பல தடவைகள் மன்னார் மீனவர்கள் உரிய தரப்பிற்கு தெரியப்படுத்தியும் அரசும்,உரிய அதிகாரிகளும் அதனை கண்டு கொள்வது போல் இல்லை.

இந்த நிலையில் முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட காயாக்குழி பகுதியில் தென்பகுதி மீனவர்களை மீள் குடியேற்றுவதன் மூலம் எமது மீனவர்கள் பல்வேறு பிரச்சினைகளை சந்திக்கும் நிலை ஏற்படும்.எனவே தென்பகுதி மீனவர்கள் தொடர்பில் முசலி பிரதேச்ச செயலாளர் பிரிவில் முன்னெடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் உடனடியாக கைவிடப்பட வேண்டும்.

குறித்த நடவடிக்கை தொடர்ந்து முன்னெடுக்கப்படும் சந்தர்ப்பத்தில் பாரிய எதிர்ப்பு நடவடிக்கைகளை மீனவர்கள் ஒன்றிணைந்து மேற்கொள்ளும் நிலை ஏற்படும்.

குறித்த பிரச்சினைகள் குறித்து மீன்பிடி சங்கங்களின் ஊடாக அரச அதிகாரிகள்,பாராளுமன்ற உறுப்பினர்கள்,வடமாகாண சபை உறுப்பினர்கள்,அமைச்சர்கள் ஆகியோருக்கு உடனடியாக தெரியப்படுத்தப்படவுள்ளது.

அத்தோடு எதிர்வரும் வெள்ளிக்கிழமை(13) பிற்பகல் 1.30 மணியளவில் சிலாபத்துறை மையப்பகுதியில் இருந்து முசலி பிரதேசச் செயலாளர் பணிமனை நோக்கி ஊர்வலமாக சென்று தமது எதிர்ப்பை வெளிப்படுத்துவதோடு,மகஜர் ஒன்றையும் கையளிக்க திட்டமிட்டுள்ளோம்.

குறித்த நடவடிக்கையானது மன்னார் மாவட்ட மீனவர்களின் பிரச்சினைக்கான தீர்வை பெற்றுக்கொள்ளுவதற்கானதாக அமையும்.
தென்பகுதி மீனவர்களை மன்னார் மாவட்டத்தில் குடியமர்த்துவது என்பதனை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்பதனை மீனவர்கள் வழியுறுத்தியுள்ளனர்.

எனவே வடமாகாணத்தில் உள்ள அனத்து மீனவ அமைப்புக்களும் தமது எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.மேலும் பாராளுமன்ற உறுப்பினர்கள்,மாகாண சபை அமைச்சர்கள்,உறுப்பினர்கள் குறித்த விடையத்தில் அக்கரை செலுத்த வேண்டும்.என மன்னார் மாவட்ட மீனவர்கள் சார்பாக கோரிக்கை விடுப்பதாக வடமாகாண கடற்தொழிலாளர் இணையத்தின் தலைவர் என்.எம். ஆலம் தெரிவித்தார்.

குறித்த கலந்துரையாடலில் மன்னார் மாவட்ட கடற்தொழில் சம்மேளனத்தின் தலைவர் ஏ.ஜஸ்ரின் சொய்சா,மற்றும் மீனவ சங்கங்களின் பிரதி நிதிகள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.




-மன்னார் நிருபர்-

(9-05-2016)



முசலி பிரதேசச் செயலாளர் பிரிவில் தென்பகுதி மீனவர்களுக்கு தொழில் செய்ய மாற்றிடம் கொடுத்து குடியேற காணியும் வழங்க நடவடிக்கை-.Photos Reviewed by NEWMANNAR on May 10, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.