முல்லைத்தீவில் பதுக்கி வைக்கப்பட்ட தங்கம் தோண்டப்பட்டது.
முல்லைத்தீவு முள்ளியவளையில் நிலத்தடியில் பதுக்கி வைக்கப்பட்ட தங்கத்தினை பெற தேடுதல் சம்பவபம் ஒன்று இன்று மாலை பாதுகாப்பிற்கு மத்தியில் இடம்பெற்றது. யுத்தத்திற்கு முன்னர் தண்ணீரூற்றில் இருந்த தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சொந்தமான தமிழீழ வைப்பகத்தில் காணப்பட்ட தங்கங்கள் யுத்த காலத்தில் இவ்விடத்தில் புதைக்கப்பட்டனவென்று கிடைத்த தகவல்களின் அடிப்படையில் பாதுகாப்பு படையினரால் இத்தேடல் சம்பவம் மேற்கொள்ளப்பட்டது.
முள்ளியவளை வித்தியானந்தா தேசிய பாடசாலைக்கு இடது பக்கமாக அமைந்துள்ள சாந்தமேனன் என்பவருக்கு சொந்தமான இக்காணியில் கடந்த மாதம் இனம் தெரியாத சில நபர்கள் தங்கத்தினைப் பெற தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். தகவல் அறிந்த பொலிசார் அவ்விடத்திற்கு விரைந்தனர், தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த நபர்கள் தப்பிச்செல்ல பொலிசார் அவ்விடத்தை முற்றுகையிட்டனர்.
சீ.ஐ.டி மூலம் மேலதிக தகவல்களை அறிந்த பாதுகாப்பு படையினர் முதலாம் கட்ட தேடுதல் நடவடிக்கையினை நீதிபதி மற்றும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் முன்னிலையில் கடந்த மாதம் மேற்கொண்டனர். எந்தவித பொருளும் கிடைக்கப்பெறாத நிலையில் தேடுதல் தோல்வியிலே முடிவடைந்தது.
பின்னர் பொலிசாரின் கண்காணிப்பில் இருந்த இந்த காணி மேலும் சில தகவல்கள் கிடைக்கப்பெற்ற பின்னர் மீண்டும் இரண்டாம் கட்ட தேடுதல் நடவடிக்கையினை இன்று மேற்கொண்டனர்.
மாலை 4.30 மணிக்கு ஆரம்பமான தேடல் 7.00 மணியாகியும் தொடர்ந்த வண்ணமே உள்ளது. தங்கம் அகப்படுமா? இல்லையா? பொறுத்திருந்து பார்ப்போம்...
மன்னார் இணையத்துக்காக Shaam
முள்ளியவளை வித்தியானந்தா தேசிய பாடசாலைக்கு இடது பக்கமாக அமைந்துள்ள சாந்தமேனன் என்பவருக்கு சொந்தமான இக்காணியில் கடந்த மாதம் இனம் தெரியாத சில நபர்கள் தங்கத்தினைப் பெற தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். தகவல் அறிந்த பொலிசார் அவ்விடத்திற்கு விரைந்தனர், தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த நபர்கள் தப்பிச்செல்ல பொலிசார் அவ்விடத்தை முற்றுகையிட்டனர்.
சீ.ஐ.டி மூலம் மேலதிக தகவல்களை அறிந்த பாதுகாப்பு படையினர் முதலாம் கட்ட தேடுதல் நடவடிக்கையினை நீதிபதி மற்றும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் முன்னிலையில் கடந்த மாதம் மேற்கொண்டனர். எந்தவித பொருளும் கிடைக்கப்பெறாத நிலையில் தேடுதல் தோல்வியிலே முடிவடைந்தது.
பின்னர் பொலிசாரின் கண்காணிப்பில் இருந்த இந்த காணி மேலும் சில தகவல்கள் கிடைக்கப்பெற்ற பின்னர் மீண்டும் இரண்டாம் கட்ட தேடுதல் நடவடிக்கையினை இன்று மேற்கொண்டனர்.
மாலை 4.30 மணிக்கு ஆரம்பமான தேடல் 7.00 மணியாகியும் தொடர்ந்த வண்ணமே உள்ளது. தங்கம் அகப்படுமா? இல்லையா? பொறுத்திருந்து பார்ப்போம்...
மன்னார் இணையத்துக்காக Shaam
முல்லைத்தீவில் பதுக்கி வைக்கப்பட்ட தங்கம் தோண்டப்பட்டது.
Reviewed by NEWMANNAR
on
June 30, 2016
Rating:

No comments:
Post a Comment