தமிழர் பகுதிகளில் அதிகளவான இராணுவம் நிலைகொண்டுள்ளது! ஐ.நா ஆணையாளர் குற்றச்சாட்டு....
இலங்கை தொடர்பான ஜெனீவா தீர்மானம் நிறைவேற்றபட்டு ஒன்பது மாதங்கள் கடந்துள்ள நிலையில் இலங்கையில் பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படவில்லை என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் தெரிவித்துள்ளார்.
அத்துடன், பயங்கரவாத தடைச்சட்டத்தின் ஊடாக தற்போதும் பலர் கைது செய்யப்படுவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 32வது கூட்டத்தொடர் தற்போது ஜெனிவாவில் இடம்பெற்று வரும் நிலையில், இலங்கை தொடர்பாக வாய்மூல அறிக்கையினை ஆணையாளர் சமர்ப்பித்துள்ளார்.
இலங்கை தொடர்பான ஆணையாளரின் வாய்மூல அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் அதிகளவான இராணுவ பிரசன்னம் காணப்படுகின்றது. தனது இலங்கை விஜயத்தின் போது இதனை நன்கு அவதானிக்க முடிந்தது.
அதிகளவான இராணுவம் நிலைகொண்டுள்ளதால் அப்பகுதிகளிலுள்ள மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளையும் இதன் போது கண்டறிய முடிந்தது.
இந்நிலையில் பாதிக்கப்பட்டுள்ள சிறுபான்மை இன மக்கள் மத்தியில் நம்பிக்கையினை பெற்றுக்கொள்ள இலங்கை அரசாங்கம் இன்னும் கிரமமான முறையில் அதன் நகர்வுகளை முன்னெடுக்க வேண்டும்.
இதேவேளை, பொறுப்புகூறல் பொறிமுறையில் அனைத்துலக பங்களிப்பு அவசியமானது எனவும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை ஆணையாளர் தனது வாய்மூல அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.
இதனிடையே, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை ஆணையாளரின் வாய்மூல அறிக்கை, முன்கூட்டியே அதன் பிரதி ஒன்று வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தமிழர் பகுதிகளில் அதிகளவான இராணுவம் நிலைகொண்டுள்ளது! ஐ.நா ஆணையாளர் குற்றச்சாட்டு....
Reviewed by Author
on
June 30, 2016
Rating:

No comments:
Post a Comment