அண்மைய செய்திகள்

recent
-

யாழ்ப்பாணம் வரணி பகுதியில் -இரு ஆசிரியர்கள் உட்பட மூவர் கைது

யாழ்ப்பாணம் வரணி பகுதியில் உள்ள பாடசாலை மாணவி ஒருவரை துஷ்பிரயோகத்துக்குட்படுத்திய விவகாரம் தொடர்பில் மேலும் இரு ஆசிரியர்கள் உட்பட மூவரை நேற்று மாலை கொடிகாமம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

யாழ்ப்பாணம் வரணி பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றில் தரம் 6இல் கல்வி கற்கும் 11 வயதடைய மாணவியை கடந்த சிலவாரங்களுக்கு முன் அப் பாடசாலையில் கல்வி கற்பிக்கும் 45 வயதுடைய ஆசிரியர் ஒருவர் பிரத்தியோக வகுப்பு ஒன்றை நடத்தும் போது துஷ்பிரயோகத்திற்க்கு உட்படுத்தியிருந்தார் என சந்தேகத்தின் அடிப்படையில் குற்றஞ்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டிருந்தார்.

இருடன் மேற்படி சம்பவத்தை மறைக்க முற்பட்டதாக சந்கேத்தின் பேரில் அக் கல்லூரி அதிபர் மற்றும் 3 ஆசிரியைகள் கைதாகி விளக்க மறியலில் உள்ளனர்.
இந் நிலையில் பொலிஸார் மேற்கொண்டுவரம் மேலதிக விசாரணை அடிப்படையில் அக் கல்லூரியில் கல்வி கற்பிக்கும் மேலும் இரு ஆசிரியர்கள் மற்றும் பழைய மாணவர் சங்க செயலாளர் ஆகியோர் நேற்று கைதாகியுள்ளனர்.
யாழ்ப்பாணம் வரணி பகுதியில் -இரு ஆசிரியர்கள் உட்பட மூவர் கைது Reviewed by NEWMANNAR on June 26, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.