அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மாவட்த்தில் 1989ம் ஆண்டிற்கு பிறகு முதல் தடவையாக......

மன்னார் மாவட்த்தில் 1989ம் ஆண்டிற்கு பிறகு முதல் தடவையாக ஆதனங்கள் மீள்மதிப்பீடு -VALUATION தற்போது நடைபெற்று வருகின்றது.
இதன் முதற்கட்ட நிகழ்வாக மன்னார் நகர சபைக்கு உட்பட்ட பகுதிகளில் அதாவது பதிவுக்கு உட்பட்ட 7வட்டாரங்களிலும் இச்செயற்பாடு நடைபெறவுள்ளது.

அந்த 7வட்டாரங்களும் பின்வருமாறு….

மன்னார் நகர சபை நிர்வாக எல்லைக்குட்பட்ட 07 வட்டாரங்களின் விபரங்கள்
இல    வட்டார இல    கிராம அலுவலர் பிரிவு பெயர்   கிராமங்களின்



  வட்டார இலக்கம் 
01
  
கிராம அலுவலர் பிரிவு பெயர்  
பள்ளிமுனை கிழக்கு
    பள்ளிமுனை மேற்கு

கிராமங்களின்  பெயர்
       பள்ளிமுனை 

வட்டார இலக்கம் 
02

கிராம அலுவலர் பிரிவு பெயர்  
உப்புக்குளம் வடக்கு
 உப்புக்குளம் தெற்கு

கிராமங்களின்  பெயர்
    உப்புக்குளம்

வட்டார இலக்கம் 
03 

 கிராம அலுவலர் பிரிவு பெயர்  
மூர்வீதி 

                                                      கிராமங்களின்  பெயர்                                                             மூர்வீதி
புதிய மூர்வீதி

வட்டார இலக்கம் 
04

கிராம அலுவலர் பிரிவு பெயர்  
பெரியகடை      
                               
கிராமங்களின்  பெயர்   
 பெரியகடை

வட்டார இலக்கம் 
05

கிராம அலுவலர் பிரிவு பெயர்  
சின்னக்கடை

கிராமங்களின்  பெயர் 
 சின்னக்கடை

வட்டார இலக்கம் 
06    

கிராம அலுவலர் பிரிவு பெயர்  
பெற்றா
சாவற்கட்டு
எழுத்தூர்
பட்டித்தோட்டம்
 எமில்நகர் 

 கிராமங்களின்  பெயர்
பெற்றா
சாவற்கட்டு
எழுத்தூர்
செல்வநகர்
தோட்டக்காடு
தரவன்கோட்டை
பட்டித்தோட்டம்
கீரி
எமில்நகர்
ஜீம்ரோன் நகர்
ஜுவபுரம்


வட்டார இலக்கம் 
07           
                       
கிராம அலுவலர் பிரிவு பெயர்  
சௌத்பார்
பனங்கட்டுக்கொட்டு கிழக்கு
பனங்கட்டுக்கொட்டு மேற்கு

கிராமங்களின்  பெயர்
சௌத்பார்
சாந்திபுரம்
பனங்கட்டுக்கொட்டு கிழக்கு
பனங்கட்டுக்கொட்டு மேற்கு




தற்போது 1ம்-வட்டாரமான பள்ளிமுனையிலும் 2ம் வட்டாரமான உப்புக்குளத்திலும் ஆரம்பிக்கப்பட்டு சிறப்பான முறையில் நடைபெறுகின்றது.
வடக்கு மாகாணத்தில் மீள்மதிப்பீடு திணைக்களத்தில் இருந்து வருகை தந்து மீள்மதிப்பீடு செய்யும் அதிகாரிகளோடு எமது நகர சபையின் உத்தியோகத்தர்களும் தங்கள் வீடுகளுக்கும் வாழ்விடங்களுக்கும் வேறு ஆதனங்களையும் பார்வையிட்டு மீள்மதிப்பீடு செய்வதற்கு முழுமையான ஒத்துழைப்பினை வழங்குவதோடு உங்களின் செத்துக்கள் அதாவது அசையும் அசையாச்செத்துக்கள் வீட்டின் மதிப்பு காணியின் மதிப்பு அதாவது தற்போதைய நிலையில் தங்களின் செத்துக்களின் பெறுமதியை அறிந்து கொள்ளுதல் தான் இதன் பிரதான நோக்கமாகும்.

இச்செயற்பாடானது குறைந்தது 5வருடங்களுக்கு ஒரு முறையாவது அரசாங்கத்தினரால் மேற்கொள்ளப்படும் செயற்பாடு ஆகும் ஆனால் 27 வருடங்களுக்கு பின்பு தற்போது நடைபெறுகின்றது.

மீள்மதிப்பீடு ஆதனங்கள் மதிப்பீடு செய்தபின் தங்களின் நிலையான குடியிருப்பு உறுதிப்படுத்துவதோடு வீட்டிலக்கம் மாற்றப்பட்டு புதிய இலக்கம் தரப்படும் இது தபால்சேவையினை தடையின்றி வழங்கவும் சோலை வரியினை சரியான தொகையில் பெற்று மன்னார் நகரசபை வளர்ச்சியினை உறுதிப்படுத்துவதற்கு தங்களின் ஆதரவுதான் தேவையாகவுள்ளது.
தங்களின் கடமையை உணர்ந்து செயற்பட்டால் நகர சபை வளர்ச்சிப்பாதையில் முன்னேறும்…. மன்னார் நகர சபைச்செயலாளரின் வேண்டுகோள்.....
மன்னார் மாவட்த்தில் 1989ம் ஆண்டிற்கு பிறகு முதல் தடவையாக...... Reviewed by Author on July 09, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.