அண்மைய செய்திகள்

recent
-

யாழ். பல்கலைக்கழகத்தில் சிங்கள மாணவர்களுக்கு பாதுகாப்பு இல்லையாம்!


யாழ். பல்கலைக்கழகத்தில் தென் பகுதி மாணவர்களுக்கு உரிய பாதுகாப்பு இல்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய மாணவர்களின் பெற்றோர்கள் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.

யாழ். பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற மோதலில் பாதிக்கப்பட்ட சிங்கள மாவர்களின் பெற்றோர்கள் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.

யாழ்.பல்கலைக்கழகத்தில் சிங்கள மாணவர்களின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பலரும் உறுதியளித்துள்ளனர். எனினும் அது தமக்கு திருப்தியளிக்கவில்லை என பெற்றோர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

தமது பிள்ளைகளை மீண்டும் யாழ். பல்கலைக்கழகத்திற்கு அனுப்புவதில் சிக்கல்கள் பலவற்றிட்கு முகம் கொடுக்க நேர்த்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில், தமது பிள்ளைகளின் பர்துகாப்பை உறுதிப்படுத்தி, கல்வியை தொடருவதற்கு அனுமதியளிக்குமாறு பெற்றோர்கள் இதன் போது கோரிக்கை விடுத்துள்ளனர்.

யாழ். பல்கலைக்கழகத்தில் சிங்கள மாணவர்களுக்கு பாதுகாப்பு இல்லையாம்! Reviewed by Author on July 27, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.