6 கைக்குண்டுகள் மீட்டு செயலிழப்பு
ஓமந்தை அரசமுறிப்புப் பகுதியில் வெடிக்காத நிலையில் இருந்த ஆறு கைக்குண்டுகள் மீட்கப்பட்டு செயலிழக்கச் செய்யப்பட்டதாக ஓமந்தைப் பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று வெள்ளிக்கிழமை காலை 7.00 மணியளவில் பனை மரம் ஒன்றுக்கு கீழ்ப்பகுதியில் கைக்குண்டுகள் இருப்பதைக் கண்ட அப்பகுதி வாசி ஒருவர் கிராம அலுவலர் ஊடாக ஓமந்தைப் பொலிஸாருக்கு அறிவித்தார்.
சம்பவ இடத்திற்குச் சென்ற விஷேடஅதிரடிப்படையினர் ஆறு குண்டினையும் மீட்டு செயலிழக்கச் செய்ததாக ஓமந்தைப் பொலிஸார் தெரிவித்தனர்.
6 கைக்குண்டுகள் மீட்டு செயலிழப்பு
Reviewed by NEWMANNAR
on
July 16, 2016
Rating:

No comments:
Post a Comment