அண்மைய செய்திகள்

recent
-

சிறுத்தோப்பு காட்டுப்பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 18 இலட்சம் ரூபாய் பெறுமதியான கேரளக்கஞ்சப்பொதிகள் மீட்பு.-Photos

மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி சிறுத்தோப்பு கட்டுப்பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில் சுமார் 18 இலட்சம் ரூபாய் பெறுமதியான கேரளக்கஞ்சாப்பொதிகளை பேசாலை பொலிஸார் நேற்று வியாழக்கிழமை மாலை மீட்டுள்ளனர்.

போதைப்பொருள் தடுப்பு பிரிவு பொலிஸ் உத்தியோகஸ்தர் சசிக்குமார்(89049) கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து மன்னார் மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் சியந்த பீரிஸ் அவர்களின் ஆலோசனைக்கு அமைவாகவும்,பேசாலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எச்.எம்.கின்சிலி ஹேரத் அவர்களின் வழி நடத்தலில் கீழ் மன்னார் மாவட்ட போதைப்பொருள் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் விவுத்தி சந்திர சேகர தலைமையில் சென்ற பொலிஸ் அதிகாரிகளான வனசிங்க (11133), சசிக்குமார்(89049), சபீத்(89043) ஆகியோர் அடங்கிய பொலிஸ் குழுவினரே சிறுத்தோப்பு காட்டுப்பகுதியில் பதுக்கி வைத்திருந்த கேரளக் கஞ்சாப்பொதிகளை மீட்டுள்ளனர்.

9 பொதிகளில் அடைக்கப்பட்ட குறித்த கஞ்சாப்பொதிகள் 18 கிலோ 600 கிராம் எடை கொண்டது என தெரிவித்த பொலிஸார் சுமார் 18 இலட்சம் ரூபாய் பெறுமதி வாய்ந்தது என தெரிவித்துள்ளனர்.

எனினும் சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை.மேலதிக விசாரனைகளை பேசாலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.





சிறுத்தோப்பு காட்டுப்பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 18 இலட்சம் ரூபாய் பெறுமதியான கேரளக்கஞ்சப்பொதிகள் மீட்பு.-Photos Reviewed by NEWMANNAR on July 29, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.