அண்மைய செய்திகள்

recent
-

அமெரிக்காவின் மற்றுமொரு கடற்படை கப்பல் இலங்கைக்கு!


கடந்த நான்கு மாதங்களுக்குள் அமெரிக்காவின் இரண்டாவது கடற்படை கப்பல் ஒன்று இலங்கைக்கு வருகிறது.

முன்னதாக கடந்த மார்ச்சில் அமரிக்காவின் 7வது பிரிவின் யுஎஸ்எஸ் புளுரிஜ் என்ற கடற்படை கப்பல் இலங்கைக்கு வந்துசென்றது.

இந்தநிலையில் யூஎஸ்எஸ் நியூ ஒர்லீன்ஸ்( LPD 18) என்ற கப்பலே எதிர்வரும் 24ஆம் திகதியன்று கொழும்பு துறைமுகத்துக்கு வருகிறது.

இதில், அமரிக்காவின் 13வது கடலாய்வு பிரிவுப்படையினர் பயணம் செய்கின்றனர். கடந்த 7 மாதங்களாக இந்தக்கப்பல், மத்திய கிழக்கு மற்றும் தென்கிழக்காசிய கடலில் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.

கப்பலில் வரும் சுமார் 200 அமெரிக்க கடற்படை வீரர்கள், இலங்கையின் கடற்படைவீரர்களுடன் இணைந்து பயிற்சிகள், அனர்த்த நிவாரணம் மற்றும் மனிதாபிமான நடவடிக்கைகள் என்பவற்றில் இரண்டு நாட்களுக்கு ஈடுபடவுள்ளனர்.

21ஆம் நூற்றாண்டு இந்திய பசுபிக் பிராந்தியத்துக்கு பல வழிகளிலும் முக்கியமான நூற்றாண்டாகும். இதில் இலங்கையை பொறுத்தவரை அந்த நாடு, முக்கிய இடத்தில் உள்ளது.

இந்தநிலையில் அமெரிக்க கடற்படையினர், கடல் பாதுகாப்பு மற்றும் ஸ்திரதன்மை ஆகிய விடயங்களில் இலங்கை கடற்படையினருடன் இணைந்து செயற்பட தயாராக இருப்பதாக அமெரிக்கத் தூதுவர் அடுல் கெசாப் தெரிவித்துள்ளார்.

இதேவேளை தமது படையினர் இலங்கையின் பங்காளிகளுடன் பயிற்சிகளில் ஈடுபடவுள்ளனர் என்று கப்பலின் கொமாண்டர் மேஜர் ஜோன் ஆர்னல்ட் தெரிவித்துள்ளார்;.

அமெரிக்காவின் மற்றுமொரு கடற்படை கப்பல் இலங்கைக்கு! Reviewed by Author on July 23, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.