மன்னார் தோட்டவெளி அ-த-க பாடசாலையின் உயர்தர மாணவர்களது பிரியாவிடை---முழுமையான படங்கள் இணைப்பு
மன்னார் தோட்டவெளி அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் உயர்தர மாணவர்களது பிரியாவிடை விருந்துபசாரம் இடம்பெற்றது...
மன்னார் கல்விக்கோட்டத்துக்கு உட்பட்ட தோட்டவெளி அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் உயர்தர மாணவர் ஒன்றியத்தால் நடாத்தப்பட்ட பிரியாவிடை விருந்துபசார நிகழ்வு 18-07-2016 திங்கள் காலை 10:30 மணியளவில் கல்லூரியின் பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.
நிகழ்விற்கு கல்லூரி சமூகத்தினரால் பிரதம விருந்தினராக அழைக்கப்பட்டு கலந்துகொண்ட வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்கள் அங்கு உள்ள மாணவர்களுக்கு அவர்களது உயர்தர பரீட்சைக்கு தனது வாழ்த்துக்களையும் ஆசீரையும் தெரிவித்ததோடு, அவர்களது பாடசாலையின் பௌதீக வழ அபிவிருத்திக்கு அடுத்த ஆண்டு நிதியில் இருந்து நிதி ஒதுக்கித் தருவதாகவும், இந்த பாடசாலையில் இருந்து பரீட்சைக்குத் தோற்றும் ஐந்து மாணவிகளும் பல்கலைக்கழகம் செல்லும் பட்சத்தில் அவர்களது உயர்கல்விக்காக தன்னால் ஆன சகல உதவிகளையும் செய்து தருவதாகவும் தெரிவித்ததோடு, நல்ல பல அறிவுரைகளையும் மாணவர்களுக்கு தெரிவித்து விடைபெற்றார்.
நிகழ்வில் அருட் தந்தையர்கள், அருட் சகோதரிகள், கல்வித்திணைக்கள அதிகாரிகள், ஏனைய பல பாடசாலைகளின் ஆசிரியர்கள் மாணவர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.
மன்னார் தோட்டவெளி அ-த-க பாடசாலையின் உயர்தர மாணவர்களது பிரியாவிடை---முழுமையான படங்கள் இணைப்பு
Reviewed by Author
on
July 18, 2016
Rating:

No comments:
Post a Comment