சிறப்பக இடம் பெற்ற மன்னார் கீரி அன்புச் சகோதரர் இல்லத்தின் 15 ஆவது ஆண்டு நிறைவு விழா.படம்
மன்னார் கீரி கிராமத்தில் அமைந்துள்ள அன்புச் சகோதரர் இல்லத்தின் 15 ஆவது ஆண்டு நிறைவு விழா நேற்று வெள்ளிக்கிழமை மாலை குறித்த இல்லத்தின் இயக்குனர் தலைமையில் இடம் பெற்றது.
குறித்த நிகழ்விற்கு சிறப்பு விருந்தினராக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கலந்து கொண்டார்.
மேலும் குறித்த இல்லத்தின் வளர்ச்சிக்காக பல்வேறு உதவிகளை மேற்கொண்டவர்களும் வெளி நாடுகளில் இருந்து வருகை தந்து கலந்து கொண்டனர்.
இதன் போது குறித்த இல்லத்தில் உள்ள மாணவர்களினால் பல்வேறு நிகழ்வுகள் அரங்கேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
சிறப்பக இடம் பெற்ற மன்னார் கீரி அன்புச் சகோதரர் இல்லத்தின் 15 ஆவது ஆண்டு நிறைவு விழா.படம்
Reviewed by NEWMANNAR
on
August 20, 2016
Rating:
No comments:
Post a Comment