அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் சாந்திபுரம் கிராமத்துக்கு சிறப்பு விஜயம் -----கே.கே.மஸ்த்தான்

 மன்னார் சாந்திபுரம் கிரமசேவகர் பிரிவுக்குஉட்பட்டசாந்திபுரம் கிராமத்துக்கு  வன்னி கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் K.காதர் மஸ்தான் அவர்கள் சிறப்பு விஜயம் ஒன்றை
30.08.2016  மேற்கொன்டிருந்தார். இந்த சந்திப்பானது சாந்திபுர கிரம அபிவிருத்திசங்கத்தின் ஏற்பாட்டில் இடம் பெற்றது.

மேற்படி  சந்திப்பானதுமிகவும் பின் தங்கிய நிலையில் காணப்படும் சாந்திபுர கிரமத்தின் அபிவிருத்தியை முன்னொடுப்பதற்காகவும் அத்துடன் அடிப்படைவசதிகள் தொடர்பான குறைபாடுகளை நிவர்த்தி செய்வதயற்கான சந்திப்பாக அமைந்தது.

மேற்படிசந்திப்பில் இக்கிராமத்தில் உரிய போக்குவரத்து வசதிகள் இல்லை எனவும் காரணம் ஒழுங்கான வீதியோ,வடிகால் அமைப்புக்களோ நிர்மாணிக்கப் படவில்லை எனவும் மழை காலத்தில் இக்கிராமம் வெள்ளபாதிப்புக்கு உள்ளாவதாகவும் இதனல் இங்குள்ளமக்கள் பெரிதும் பாதிக்கபடுவதாகவும்.  குறிப்பாக பாடசலைமாணவர்கள் மிகவும் சிரமபடுவதாகவும் இதற்கு உரியதீர்வை பெற்றுதறுமாறும் மக்கள் வேண்டுகோள்விடுத்தனர்.

இதை தொடர்ந்து உரை அற்றிய பாரளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்த்தான் மன்னர் மாவட்டமானது இந்தஅரசங்கத்தின் ஆட்ச்சியில் அபிவிருத்திபாதையில் செல்வதாகவும் எனவே தழிழ்,முஸ்ஸிம் மக்களாகிய நாம்  இன,மத வேறுபாடு இன்றி இந்தஅரசங்கத்தின் ஆட்சிக்கு ஆதரவு வழங்க வேண்டும் எனகேட்டுகொண்டார் அத்துடன் இக்கிராமத்தின் பிரச்சினைகள் தீர்கபட வெகுசீக்கிரமாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதியளித்தார்.










மன்னார் சாந்திபுரம் கிராமத்துக்கு சிறப்பு விஜயம் -----கே.கே.மஸ்த்தான் Reviewed by Author on August 31, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.