முன்னாள் போராளிகளுக்கு குறைந்த வட்டியில் கடன் திட்டம்!
சுயவேலைவாய்ப்பின் நிமித்தம் விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகளுக்கு குறைந்த வட்டி வீதத்தில் கடன்களை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
மீள்குடியேற்ற அமைச்சின் நாடாளுமன்ற கண்காணிப்புக்குழு இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடி, இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.
இறுதி போரின்போது சுமார் 12ஆயிரம் போராளிகள் படையினரிடம் சரணடைந்த பின்னர் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டு சமூகத்துடன் இணைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் புனர்வாழ்வின் போது அவர்களுக்கு தொழில் பயிற்சிகளும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
முன்னாள் போராளிகளுக்கு குறைந்த வட்டியில் கடன் திட்டம்!
Reviewed by Author
on
August 27, 2016
Rating:

No comments:
Post a Comment