சதொச முறைகேடு தொடர்பில் அமைச்சர் ரிசாத்திடம் வாக்குமூலம்
பாரிய ஊழல்கள் மற்றும் மோசடிகளுக்கு எதிரான ஜனாதிபதி ஆணைக்குழுவில் அமைச்சர் ரிசாத் பதியுதீன் தமது வாக்குமூலத்தை வழங்கவுள்ளார்.
எதிர்வரும் 29ஆம் திகதியன்று அவர் ஆணைக்குழுவினால் அழைக்கப்பட்டுள்ளார்.
முன்னைய அரசாங்கத்தின்போது ‘சத்தோச’ நிறுவனத்துக்கு இறக்குமதி செய்யப்பட்ட 5 பில்லியன் ரூபா பெறுமதியான அரிசி இறக்குமதி முறைகேடு தொடர்பிலேயே அவரிடம் வாக்குமூலம் பெறப்படவுள்ளது.
சத்தோச நிறுவனம் உட்பட்ட கைத்தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சராக அவர் தற்போது பணியாற்றுவதன் அடிப்படையிலேயே அவரிடம் குறித்த முறைகேடு தொடர்பில் வாக்குமூலம் பெறப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த முறைகேடு குற்றச்சாட்டு முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவின் மீது சுமத்தப்பட்டுள்ளது.
சதொச முறைகேடு தொடர்பில் அமைச்சர் ரிசாத்திடம் வாக்குமூலம்
Reviewed by NEWMANNAR
on
August 20, 2016
Rating:

No comments:
Post a Comment