சிறுமியை தாக்கியது தாயா? வளர்ப்பு தாயா? - நீதிமன்றில் குழப்பம்-Video
யாழ். நீர்வேலிப் பகுதியில் சிறுமியை தாக்கிய சம்பத்துடன் தொடர்புடைய பெண் ஒக்டோபர் மாதம் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
யாழ் நீதவான் க. அருமைநாயகம் இவ்வுத்தரவை பிறப்பித்தார்.
இதேவேளை, பாதிக்கப்பட்ட சிறுமி சார்பாக 6 சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் குறித்த பெண் அச்சிறுமியின் தாயில்லையெனவும் தெரிவித்தனர். ஆனால் சம்பவத்துடன் கைதுசெய்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பெண் குறித்த சிறுமி தனது மகள் எனவும் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து பதில் நீதிவான் இது தொடர்பிலும் ஆராயுமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சிறுமியை தாக்கியவர் அவரது தாயே எனவும் , வளர்ப்புத் தாய் அல்லவெனவும் சிறுமியின் தந்தை தெரிவித்துள்ளார்
சிறுமியை தாக்கியது தாயா? வளர்ப்பு தாயா? - நீதிமன்றில் குழப்பம்-Video
Reviewed by NEWMANNAR
on
September 24, 2016
Rating:

No comments:
Post a Comment