அண்மைய செய்திகள்

recent
-

இரணைதீவில் தங்கியிருந்து தொழில் செய்ய கடற்படை அனுமதி....


இரணைதீவில் தங்கியிருந்து கடற்றொழிலில் ஈடுபட இலங்கை கடற்படை அனுமதி அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் இதனை தெரிவித்தார்.

இரணைதீவில் தங்கியிருந்து தொழில் புரிவதற்கு அனுமதி அளிக்கப்பட வேண்டும் என கடற்றொழிலாளர்கள் இராஜாங்க அமைச்சரிடம் கோரியிருந்தனர்.

இது தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

இந்த நிலையில், நேற்று மாலை இலங்கை கடற்படை இதற்கான அனுமதியை வழங்கியதாக அவர் குறிப்பிட்டார்.

இதற்கமைய, இரணைதீவில் தங்கியிருந்து கடற்றொழிலில் ஈடுபட முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இரணைதீவில் தங்கியிருந்து தொழில் செய்ய கடற்படை அனுமதி.... Reviewed by Author on September 14, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.