மன்னார் மண்ணின் கலைப்பொக்கிசம் குழந்தை மாஸ்ரர் அவர்களுக்கும் அவரது புதல்வன்அருட்பணி.அன்புராசா.......
மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து கலைஞர்களை எழுத்தாளர்களை ஊக்கப்படுத்தி இலக்கியப்பணியினை செவ்வனே ஆற்றிவரும் எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம் அதன் மேலாளர் O.K.குணநாதனின் அயராத முயற்சியால்… வருடாவருடம்....
நாவல்-சிறுகதை-கவிதை-ஓவியம்-வாழ்வியல்-புனைவுக்கட்டுரை-சிறுவர் இலக்கியம்-காவியம்-சமயம்-ஆய்வியல்-அறிவியல்-வரலாறு-நாடகம் விமர்சனம் போன்று வெளிவரும் நூல்களில் இருந்து சிறந்த நூல்களுக்கான அத்தோடு சிறந்த வடிவமைப்பு சிறந்த சஞ்சிகை இனநல்லுறவுக்காகவும் இலக்கியத்திற்காகவும் அர்ப்பணிப்புடன் செயலாற்றிய மூத்த கலைஞர்கள் சமூக ஆர்வலர்களுக்கும் படைப்பாளிகளுக்கும் விருதும் பொற்கிளியும் பாராட்டுச்சாண்றிதலும் வழங்கி வருகின்றது.
இம்முறையும் மட்டக்களப்பு வேதநாயகம் மண்டபம் அரசடி மாலை 5-00 மணியளவில் பாலுமகேந்திரா தமிழியல் அரங்கில் 7ழாவது தமிழியல் விருது 06-09-2016 மிகவும் சிறப்பாக நடைபெற்றது.பிரமாண்டமான அளவில்
மன்னார் மண்ணின் வாழும் கலைப்பொக்கிசம் கலைத்தவசி குழந்தை செபமாலை(அவர்கள் நாட்டுக்கூத்து, நாடகம் போன்ற துறைகளில் அரை நூற்றாண்டுக்கும் மேலாக ஆற்றிய பணியினை முன்னிட்டு ‘தமிழியல் விருது’ வழங்கி கெரவிக்கப்பட்டார். மாஸ்ரர் அவர்களுக்கும் அவரது கலைப்புதல்வன் அருட்பணியாளன் அன்புராசா அவர்களுக்கும் தமிழியல் விருது வழங்கப்பட்டுள்ளது.
கலை வாழ்விற்காக உடல் பொருள் ஆவி அனைத்தையும் கொடுத்து உயிர்மூச்சு உள்ளவரை பாடுபடும் பன்முகப் பண்பாளனான தங்களை பார்போற்றியளித்த பட்டங்களும் விருதுகளும் பற்றி....................................................
- கவிஞர் பட்டம் 1968ம் ஆண்டு
- .கலைஞர் குழந்தை பட்டம் 1982
- முத்தமிழ் வேந்தன் பட்டம் 1994
- சாஹித்திய மண்டலப் பரிசு 1998
- கலாபூணம் விருது 1999
- திருக்கலை வேந்தன் விருது 2000
- ஆளுனர் விருது 2000
- தலைக்கோல் விருது 2005 (சமாதான நீதவான்)
- கூத்திசைக் காவலர் பட்டம் 2009.08.16 பாரிஸ் பிரான்சில் வைத்து ஐரோப்பிய தமிழ் கலை இலக்கிய நண்பர்கள் வட்டம் வழங்கியது.
- இலங்கை அரச நாடக விழாவில் 2012-2013 நாடககீர்த்தி சிறப்பு விருது அத்தோடு இன்னும் பல அமைப்புக்கள் அரச அரச சார்பற்ற நிறுவனங்கள் பொன்னாடை போர்த்தி பொற்கிளியும் பாராட்டுப் பத்திரங்கள் வழங்கி கௌரவித்துள்ளனர். அந்த வரிசையில் இந்த மூத்த கலைஞருக்கான தமிழியல் விருதும் 06-09-2016 வழங்கி கௌரவித்துள்ளனர்.
மன்னார் மண்ணின் வாழும் கலைப்பொக்கிசம் கலைத்தவசி குழந்தை மாஸ்ரர் அவர்களது கலைப்புதல்வன் அருட்பணியாளன் அன்புராசா அ.ம.தி அவர்கள் தன்னை அருட்பணியாளனாகவும் அத்தோடு தமிழ் இலக்கியப்பணியில் தன்னை இணைத்து செயலாற்று வருகின்றார் இவரது இலக்கியப்படைப்புக்களாக........
- மறைப்பணி புரிந்த மாமேதை-2000
- காலத்தின் பதிவுகள்-2002
- சுனாமி சொல்லாத சோகங்கள்-2005
- மன்னார் மாதோட்ட கத்தோலிக்க நாடகங்கள்-2007
- லூர்து-நம்பிக்கை தரும் நகர்-2009
- அதிர்வுகள்- இந்த நூலுக்குத்தான் 20014 ஆண்டுக்கான விமர்சனத்துறையில் தமிழியல் விருது வழங்கப்பட்டள்ளது. ‘
- எழுத்தாளர் ஊக்குவிப்பு மையத்தின் மேலாளர் உயர்திரு ஓ.கே.குணநாதன் அவர்களுக்கும் அவருடன் இணைந்து இப்பணியைச் செய்துவரும் அத்தனை பேருக்கும் எமது மனமார்ந்த நன்றியைத் தெருவித்துக் கொள்கின்றோம்.
தமிழ்முகில் விருதுடன் இணைந்து கொள்கின்றது தமிழியல் விருது தந்தையின் வழியில் தiனையன் கலைப்பயணத்தோடு இறைப்பணியினையும் சேர்த்தே செயலாற்றி வருகின்றமை பாராட்டுக்குரியது.
இம்முறை மன்னார் மாவட்டத்தினை பிரதிநிதிப்படுத்தி இரண்டு விருதுகளை பெற்றுள்ளமை மன்னார் கலைஞர்களுக்கும் மக்களுக்கும் மிகவும் சந்தோசமே மக்களோடு சேர்ந்து நியூமன்னார் இணையக்குழுமமும் வாழ்த்தி நிற்கின்றது.
தொகுப்பு-வை-கஜேந்திரன்-

மன்னார் மண்ணின் கலைப்பொக்கிசம் குழந்தை மாஸ்ரர் அவர்களுக்கும் அவரது புதல்வன்அருட்பணி.அன்புராசா.......
Reviewed by Author
on
September 10, 2016
Rating:

No comments:
Post a Comment