அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் வண்ணாங்குளம்'இறை இரக்க ஆலயத்தின்' கண்ணாடிகள் உடைக்கப்பட்டு திருச் சொரூபம் திருட்டு-Photos


மன்னார் மாவட்டம் மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட வண்ணாங்குளம் 'இறை இரக்க ஆலையத்தின்' கண்ணாடிகள் உடைக்கப்பட்ட நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை (11) இரவு ஆலயத்தின் பீடத்தில் வைக்கப்பட்டிருந்த 'புனித இறை இரக்க ஆண்டவர் திருச் சொரூபம் களவாடப்பட்டுள்ளதாக ஆலய சபையினர் அடம்பம் பொலிஸ் நிலையத்தில் சனிக்கிழமை காலை முறைப்பாடு பதிவு செய்துள்ளனர்.

வண்ணாங்குளம் 'இறை இரக்க ஆலயம்' கடந்த 06 ஆம் திகதி (06-11-2016) வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.

குறித்த ஆலயம் திறப்பு விழாவிற்கு முன்னர் குறித்த பிரதேசத்தில் சில குறிப்பிட்ட நபர்கள் எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்த போதும் குறித்த ஆலயம் பைவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்று (10) வெள்ளிக்கிழமை இரவு குறித்த ஆலயத்தினுள் சென்ற மர்ம நபர்கள் குறித்த ஆலயத்தின் கண்ணாடிகளை உடைத்து சுமார் 2 அடி உயரம் கொண்ட 'புனித இறை இரக்க ஆண்டவர்' திருச் சொரூபத்தை களவாடிச் சென்றுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் இன்று சனிக்கிழமை காலை குறித்த ஆலய நிர்வாகத்தினர் அடம்பம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு வந்த அடம்பன் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வண்ணாங்குளம் 'இறை இரக்க ஆலயத்தின்' கண்ணாடிகள் உடைக்கப்பட்ட நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை (11) இரவு ஆலையத்தின் பீடத்தில் வைக்கப்பட்டிருந்த 'புனித இறை இரக்க' ஆண்டவர் திருச் சொரூபம் களவாடப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படு;ததியுள்ளமை குறிப்பிடத்தகக்து.










மன்னார் வண்ணாங்குளம்'இறை இரக்க ஆலயத்தின்' கண்ணாடிகள் உடைக்கப்பட்டு திருச் சொரூபம் திருட்டு-Photos Reviewed by NEWMANNAR on November 12, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.