மன்னார் மாவட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான அரச கலை விழா...படங்கள் இணைப்பு
மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரிய தலைமையில் மாற்றுத்
திறனாளிகளுக்கான அரச கலை விழாவை மன்னார் மாவட்ட செயலக கேட்போர்கூட
கலையரங்கில் செவ்வாய்க் கிழமை 01.11.2016 மன்னார் மாவட்ட கலாச்சார அலுவலர்கள் திணைக்களம், மற்றும் சமூக சேவைகள் திணைக்களத்துடன் இணைந்து ஏற்பாடு செய்திருந்தது.
இவ் நிகழ்வின்போது மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி ஸ்ரான்லி டீ மெல் அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையில்
இன்றைய இந்த நிகழ்வை பார்க்கும்போது இங்கு மேடையில் நிகழ்வுகளை மாற்றாற்றல் கொண்டவர்கள் மேடையேற்றுகின்ற இந்நேரத்தில் நாங்கள் எங்கள் கவலைகளை மறந்து அனைவரும் ரசித்துக் கொண்டு இருக்கின்றோம்.
இந்த மாற்றாற்றல் கொண்டவர்களை நாம் விஷேட தேவைகள் உள்ளவர்கள் என குறிப்பிடுவதைவிட விஷேட திறமையுள்ளவர்கள் என குறிப்பிடுவதே பொருத்தமாக இருக்கும் என நான் நினைக்கின்றேன்.
மன்னார் மாவட்டத்ததைப் பொறுத்தமட்டில் சகல உறுப்புக்களையும் கொண்டுள்ள எம்மைவிட இந்த பிள்ளைகள் எங்களைவிட மிகவும் நேர்த்தியாக பல செயல்பாடுகளை செய்வதை நாங்கள் காண்கின்றோம்.
கடந்த வாரங்களில் நடைபெற்ற மாகாணம் மற்றும் தேசிய மட்டத்தில் நடைபெற்ற போட்டிகளில் எமது மன்னார் மாவட்ட இந்த பிள்ளைகள் பல சாதனைகளை நிலைநாட்டியுள்ளனர் என்பதை இங்கு குறிப்பிட்டாக வேண்டும். இதற்கு மூலகத்தாவாக இருந்தவர் மன்னார் 'மாடப்' இயக்குனர் அருட்சகோதரி யோசப்பின் அவர்களுக்கு நாம் நன்றி கூறவேண்டும். இவருடைய அர்ப்பணிப்பான சேவையும் ஆன்ம திருப்தியான பணியுமே இந்த பிள்ளைகளை இவ்வாறான வழிக்கு இட்டுச் செல்லுகின்றது எனலாம்.
இதனால்தான் நான் இங்கு கூறுகின்றேன் இவர்கள் விஷேட தேவைகள் உள்ளவர்கள் என தெரிவிப்பதைவிட விஷேட திறமையுள்ளவர்கள் என தெரிவிக்கின்றேன்.
இங்கு இவ் மாவட்டத்ததைச் சார்ந்த பெனில் என்ற மாற்றாற்றல் கொண்டவர் இருக்கின்றார். இவர் உண்மையில் பிறப்பில் மாற்றாற்றல் கொண்டவர் அல்ல. ஆனால் இடையில் இவருக்கு ஏற்பட்ட நோயால் இன்று முச்சக்கர வண்டியின் உதவியுடனே இவரின் செயல்பாடுகள் நடைபெறுகிறது.
ஆனால் இவர் ஒரு நம்பிக்கைக்குரிய இளைஞர் என்றே கூற வேண்டும்.
இளைஞர் பருவம் அடைந்து இவ்வாறான நிலைக்கு வந்துவிட்டால் பலர் தற்கொலைக்கு முயற்சிக்கின்றனர். ஆனால் பெனில் என்ற இந்த இளைஞன் நடக்க முடியாத நிலையிலும் தன்நம்பிக்கையுடன் தனது திறமையை வெளிக்கொணர்ந்து மாவட்டத்துக்கு இன்று பெருமை நிலைநாட்டுகின்ற நல்லதொரு கவிஞராக திகழ்கின்றார்.
அத்துடன் மாற்றுத்திறன் எழுத்தாளர் மன்னார் பெனில் என அழைக்கப்படும் பிரான்சீஸ் பெனில்டஸை மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரிய, மேலதிக அரசாங்க அதிபர் திருமதி ஸ்ரன்லி டீ மெல், மன்னார் மாவட்ட செயலக உதவி நிர்வாக அதிகாரி வசந்தி ஆகியோர் பொன்னாடை போர்த்தி நினைவு சின்னம் வழங்கி கௌரவித்தனர்.
இவ் நிகழ்வின்போது மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி ஸ்ரான்லி டீ மெல் அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையில்
இன்றைய இந்த நிகழ்வை பார்க்கும்போது இங்கு மேடையில் நிகழ்வுகளை மாற்றாற்றல் கொண்டவர்கள் மேடையேற்றுகின்ற இந்நேரத்தில் நாங்கள் எங்கள் கவலைகளை மறந்து அனைவரும் ரசித்துக் கொண்டு இருக்கின்றோம்.
இந்த மாற்றாற்றல் கொண்டவர்களை நாம் விஷேட தேவைகள் உள்ளவர்கள் என குறிப்பிடுவதைவிட விஷேட திறமையுள்ளவர்கள் என குறிப்பிடுவதே பொருத்தமாக இருக்கும் என நான் நினைக்கின்றேன்.
மன்னார் மாவட்டத்ததைப் பொறுத்தமட்டில் சகல உறுப்புக்களையும் கொண்டுள்ள எம்மைவிட இந்த பிள்ளைகள் எங்களைவிட மிகவும் நேர்த்தியாக பல செயல்பாடுகளை செய்வதை நாங்கள் காண்கின்றோம்.
கடந்த வாரங்களில் நடைபெற்ற மாகாணம் மற்றும் தேசிய மட்டத்தில் நடைபெற்ற போட்டிகளில் எமது மன்னார் மாவட்ட இந்த பிள்ளைகள் பல சாதனைகளை நிலைநாட்டியுள்ளனர் என்பதை இங்கு குறிப்பிட்டாக வேண்டும். இதற்கு மூலகத்தாவாக இருந்தவர் மன்னார் 'மாடப்' இயக்குனர் அருட்சகோதரி யோசப்பின் அவர்களுக்கு நாம் நன்றி கூறவேண்டும். இவருடைய அர்ப்பணிப்பான சேவையும் ஆன்ம திருப்தியான பணியுமே இந்த பிள்ளைகளை இவ்வாறான வழிக்கு இட்டுச் செல்லுகின்றது எனலாம்.
இதனால்தான் நான் இங்கு கூறுகின்றேன் இவர்கள் விஷேட தேவைகள் உள்ளவர்கள் என தெரிவிப்பதைவிட விஷேட திறமையுள்ளவர்கள் என தெரிவிக்கின்றேன்.
இங்கு இவ் மாவட்டத்ததைச் சார்ந்த பெனில் என்ற மாற்றாற்றல் கொண்டவர் இருக்கின்றார். இவர் உண்மையில் பிறப்பில் மாற்றாற்றல் கொண்டவர் அல்ல. ஆனால் இடையில் இவருக்கு ஏற்பட்ட நோயால் இன்று முச்சக்கர வண்டியின் உதவியுடனே இவரின் செயல்பாடுகள் நடைபெறுகிறது.
ஆனால் இவர் ஒரு நம்பிக்கைக்குரிய இளைஞர் என்றே கூற வேண்டும்.
இளைஞர் பருவம் அடைந்து இவ்வாறான நிலைக்கு வந்துவிட்டால் பலர் தற்கொலைக்கு முயற்சிக்கின்றனர். ஆனால் பெனில் என்ற இந்த இளைஞன் நடக்க முடியாத நிலையிலும் தன்நம்பிக்கையுடன் தனது திறமையை வெளிக்கொணர்ந்து மாவட்டத்துக்கு இன்று பெருமை நிலைநாட்டுகின்ற நல்லதொரு கவிஞராக திகழ்கின்றார்.
அத்துடன் மாற்றுத்திறன் எழுத்தாளர் மன்னார் பெனில் என அழைக்கப்படும் பிரான்சீஸ் பெனில்டஸை மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரிய, மேலதிக அரசாங்க அதிபர் திருமதி ஸ்ரன்லி டீ மெல், மன்னார் மாவட்ட செயலக உதவி நிர்வாக அதிகாரி வசந்தி ஆகியோர் பொன்னாடை போர்த்தி நினைவு சின்னம் வழங்கி கௌரவித்தனர்.
மன்னார் மாவட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான அரச கலை விழா...படங்கள் இணைப்பு
Reviewed by Author
on
November 13, 2016
Rating:

No comments:
Post a Comment