வட மாகாண அமைச்சர்களுக்கு எதிராக விசாரணைக்குழு தீர்மானம் - ரெஜினோல்ட் குரே
வட மாகாண அமைச்சர்களுக்கு எதிரான விசாரணைக்குழு தொடர்பில் அந்த சபையில் நிறைவேற்றிய தீர்மானத்தினை அனுப்பி வைக்குமாறு வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே அறிவித்துள்ளார்.
குறித்த அறிக்கையில்,விசாரணையை மேற்கொள்வதற்காக வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனால் நியமிக்கப்பட்டுள்ள ஒய்வு பெற்ற நீதியரசர் தலைமையிலான குழுவிற்கு அனுமதியினை வழங்குமாறும் தெரிவித்துள்ளார்.
மேலும் இதற்கான நிதி அனுமதியும் வட மாகாண ஆளுநரிடம் கோரப்பட்டிருக்கின்றது என கூறப்படுகின்றது.
இதேவேளை, வட மாகாண சபையில் நிறைவேற்றிய தீர்மானத்தினையும் அங்கு மேற்கொள்ள வேண்டியுள்ள விசாரணைகளின் விபரங்களையும் அனுப்பிவைக்குமாறு ஆளுநர் ரெஜினோலட் குரே பேரவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் மற்றும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோருக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
வட மாகாண அமைச்சர்களுக்கு எதிராக விசாரணைக்குழு தீர்மானம் - ரெஜினோல்ட் குரே
Reviewed by Author
on
November 14, 2016
Rating:
Reviewed by Author
on
November 14, 2016
Rating:


No comments:
Post a Comment