மன்னார் மண்ணில் பறிபோகவுள்ள உப்பளம் விழித்தெழுங்கள் இல்லையேல் அழித்துவிடுவார்கள்….மகஜர் இணைப்பு
மன்னார் மண்ணில் பறிபோகவுள்ள உப்பளம் மன்னரில் மடடுமல்ல வடபகுதிகளில் இருந்து பல உப்பளங்கள் தனியாருக்கு சொந்தமாகப்போகின்றது. பல தமிழ் குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வரப்போகின்றார்கள் பலரின் வாழ்வாதாரம் நாசமாகப்போகின்றது. எமது வளமும் தான் இழந்ததைவிட இருப்பதையும் கொஞ்ஞம் கொஞ்சம் மாக இழந்து வருகின்றோம். பணமுதலைகளிடமும் அரசியலில் உள்ள அரசியல் தலைமைகளிடமும் நமக்கு தெரியாமல் நமது வளங்கள் சூரையாடப்படுகின்றது இதுவரை வேட்டையாடப்பட்டோம் இப்போது நல்லாட்சியில் குறிப்பாக தமிழர்பகுதிகள் வேட்டையாடப்படகின்றது…
நாம் ஓட்டுப்போட்டு தெரிவு செய்து பாராளுமன்றத்திற்கு அனுப்பிய எமது அருமையான உறுப்பினர்கள் எமது ஏகப்பிரதிநிதிகள் எமக்காக பாராளுமன்றத்தில் தூங்கிக்கொண்டு இருக்கும் போதுதான் இரண்டு தடைவைக்கு மேல் வாசிக்கப்பட்டு வருகின்ற 10ம் திகதி 03ம் வாசிப்பிற்கு உள்ளது.
தடுப்போம்.... எதிர்ப்போம்....
இரண்டு வாசிப்பிலும் எமது ஏகப்பிரதிநிதிகள் அமோக சூ சம்மதம் தெரிவித்துள்ளனரா…??? அல்லது இச்சம்பவம் அவர்களுக்கு தெரியாதா…??? என்ற கோள்வி எழுகின்றது.
என்ன கொடுமை இது..... எமக்கு தெரிந்த விடையம் இது மட்டும் தான் இன்னும் எத்தனை விடையங்கள் எமக்கு தெரியாமல் அதேபோல் எமது ஏகப்பிரதிநிதிகளுக்கு தெரியாமல் இருக்குமோ.....??? எல்லாவற்றிற்கும் கைகளை உயர்த்தியும் தலைசாய்த்தும் ஆதரவு வழங்கவேண்டியது தான் ஏன் என்றால் எமது பிரதிநிதிகளுக்கு என்ன தேவையோ அது கிடைக்கின்றது பிறகேன் அவர்கள் எங்களை எண்ணி கவலைப்படப்போகின்றார்கள் இவர்களை நம்பி கடைசியில் எமது சந்ததிக்கு நாம் கோவணம் கூடமிஞ்சாது போல மக்களே விழித்தெழுங்கள் இல்லையேல் அழித்துவிடுவார்கள்….
இதோ உங்களின் பார்வைக்காக எமது மன்னாரின்
உப்பள ஊழியர்கள்
மாந்தை சோல்ற் லிமிற்றெற்
மன்னார்.
2016.11.18
ஐயா-அம்மணி
விலைபோக உத்தேசிக்கப்பட்டுள்ள மாந்தை சோல்ட் லிமிற்றெற்
(மன்னார் -ஆனையிறவு -குறிஞ்சாத்தீவு) உப்பளங்கள் தொடர்பாக....
வட பகுதியில் உள்ள உப்பளங்கள் அனைத்தும் மாந்தை சோல்ட் லிமிற்றெற்றின் பெயரின் கீழ் உள்ள அவற்றில் மன்னார் உப்பளம் ஆனையிறவு உப்பளங்கள் (குறிஞ்சாத்தீவு) உட்பட அனைத்து உப்பளங்களினையும் தனியார் உடமையாக்குவதற்கான ஆலோசனை நிதி அமைச்சரினால் 2016 நவம்பர் மாதம் 10ம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு முன்மொழியப்பட்டது. தற்போது இரண்டாம் கட்ட வாசிப்பும் நிறைவு பெற்று முன்றாம் கட்ட வாசிப்பை எதிர்நோக்கியுள்ள 2017ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் 203ம் இலக்க பந்தி தங்களின் மேலான கவனத்திற்காக இத்துடன் இணைக்கப்படுகின்றது.
மன்னார் உப்பளம்.
மன்னார் உப்பளம் 1938ம் ஆண்டு தொடக்கம் நீண்ட வரலாற்றைக் கொண்டது பல நிர்வாக கட்டமைப்புக்களில் இருந்து தற்போது கைத்தொழில் வணிக அமைச்சின் கீழ் இலாபத்துடன் இயங்குகின்ற உப்பளமாகும். நூற்றுக்கணக்கான குடும்பங்களின் வாழ்வாதாரத்திற்கு பங்களிப்பு செய்கின்ற உப்பளமாகும். பல மில்லியன் ரூபாய்களினை வருடாந்தம் மொத்த இலாபமாக ஈட்டித்தருவதோடு வருடாந்தம் VAT/NBT வருமான வரியாக பல மில்லியன் ரூபாய்களினை அரசிற்கு வருடாந்தம் செலுத்தி வருகின்ற மன்னார் மாவட்டத்தின் மிகப்பெரிய கைத்தொழில் நிறுவனமுமாகும்.
1990 – 2001 October வரை (உள்ளநாட்டு சண்டை நடைபெற்றுக்கொண்டிருந்த போது)
முன்னை நாள் மன்னார் மாவட்ட அரச அதிபர்களின் சிறப்பான நிர்வாக கட்டமைப்பின் கிழ் உப்பளம் பல மில்லியன் இலாபத்துடன் இயக்கப்பட்டது. பல குடும்பங்களின் வாழ்வாதாரத்திற்கு உதவி செய்யப்பட்டது. 2012/2013ல் பல மில்லியன் செலவில் கைத்தொழில் வணிக அமைச்சினால் அபிவிருத்தி செய்யப்பட்டு அதிகரிக்கப்பட்ட உப்பு உற்பத்தியுடன் பல புதிய வேலைவாய்ப்புக்களினை வழங்கி பல மில்லியன் இலாபத்தில் தற்போது மன்னார் உப்பளம் இயங்கிக்கொண்டிருக்கின்றது.
ஆனையிறவு உப்பளம்.
உள்நாட்டு சண்டைக்கு முன்பு தேசிய உப்பு உற்பத்தியில் வட பகுதியின் மிகப்பெரிய உப்பளமான ஆனையிறவு உப்பளம் ஐம்பதாயிரத்திற்கு மேற்ப்பட்ட மெற்றிக்தொன் உப்பினை உற்பத்தி செய்து தேசிய உற்பத்தியில்; குறிப்பிடத்தக்க பங்களிப்பினை செய்து அப்பகுதியில் ஆயிரக்கணக்கான குடும்பங்களின் வாழ்வாதாரத்திற்கு உதவிய உப்பளமாகும்.
நான்கு தசாப்தங்களாக உற்பத்தி மௌனிக்கப்பட்டிருந்த வடமாகாணத்தின் தாய் உப்பளம் ஆணையிறவு தற்போது மீண்டும் அபிவிருத்தி செய்து போரினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களிற்கு நிரந்தர வேலைவாய்ப்பினை வழங்கி மிகப்பெரிய உப்பு அறுவடையினை பெற்றுக்கொள்ள கைத்தொழில் வணிக அமைச்சினால் பல மில்லியன் செலவில் அபிவிருத்தி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந் நிலையில் ஆனையிறவு உப்பளத்தினையும் மன்னார் உப்பளத்தினையும் விற்பதற்கு நல்லாட்சி அரசு என்று கூறிக்;கொண்டு அரசு எடுக்கும்; நடவடிக்கையானது போரினால் பாதிக்கப்பட்ட வட பகுதி மக்களின் வாழ்வாதாரத்தினையும்ää ஏழை எளிய மக்களின் வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதாரத்தினையும்ää நீண்ட கால திட்டமிடலின் ஊடாக இல்லாதொழிக்கும் நடவடிக்கையாகவே நாம் கருதுகின்றோம்.
இது தனியார் ஒருவரின் கைக்கு செல்லுமானால் வருடா வருடம் இதன் மூலம் ஈட்டப்படுகின்ற வருமானம் தனியொரு முதலாளியினையே சென்றடையும். இதனை கொள்வனவு செய்பவர் காலப்போக்கில் உப்பளத்தினை மூடிவிட்டு வேறு வருமானம் பெற்றுக்கொள்ளும் வகையில் இக்காணிகளினை பயன்படுத்த முனையலாம் இதனால் நூற்றுக்கணக்கான ஏழைக்குடும்பங்களின் வாழ்வாதாரம் கேள்விக்குள்ளாகும்.
எதிர்பார்ப்பு
எனவே வடபகுதி மாந்தை சோல்ட் லிமிற்றெற்றின் கீழ் உள்ள மன்னார்ää ஆனையிறவு மற்றும் குறிஞ்சாத்தீவு உப்பளங்களினை அரசு அபிவிருத்தி செய்து உள்நாட்டு போரினால் பாதிக்கப்பட்ட வட பகுதி மக்களின் வாழ்வாதாரää பொருளாதார வாழ்க்கைத்தரம் மேம்பாடடைய வேலைவாய்ப்புக்களினை வழங்கி உப்பு உற்பத்தியினையும் அதனுடன் இணைந்த உப உற்பத்திகளினையும் மேலும் அதிகரிக்கக் கூடிய திட்டங்களினை உருவாக்கி நாட்டின் தேசிய உற்பத்திக்கு பங்களிப்பு செய்கின்ற வகையில் வடக்கின் உபாயரீதியான உப்பளங்களை அபிவிருத்தி செய்ய நல்லாட்சி அரசு முன்வர அழுத்தம் கொடுக்க வேண்டியது மக்களை நேசிக்கும் தலைவர்களின் தார்மிக கடமையாகும்.
வடக்கின் உப்பளங்களினை தனியார் மயப்படுத்த அரசு எடுக்கும் நடவடிக்கை வரலாற்று தவறாகும் அதனை நிறுத்துவதற்கு வடக்கின் வாக்காளர்களாக இருந்து தங்களிற்கு ஒத்துழைப்பு நல்கிய மக்களின் நலன் கருதி கட்சி வேறுபாடின்றி அழுத்தம் கொடுக்க வேண்டும் என மக்கள் பிரதிநிதிகளாகிய தங்களை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.
“எதிர்பாக்கப்படும் புதிய அரசியல் யாப்பிற்கமைவாக வட பகுதி தமிழ் பேசும் மக்களிற்கு நல்லாட்சி அரசால் சுயாட்சி வழங்கப்படும் போது வடபகுதி உபாயரீதியான உப்பளங்கள் எமக்கு நிலையான வருமானம் தரும் சொத்தாகும்.”
மன்னார். ஆணையிறவுää கொழும்பு ஊழியர்களின் கையொப்ப பிரதிகள் இத்துடன்இணைக்கப்பட்டுள்ளது.
வட மாகாண மக்களின் கையொப்பங்கள் பெறப்பட்டு விரைவில் அனுப்பி வைக்கப்படும்.
“நன்றி”
பிரதிகள்:
02. பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவர்-உரிய நடவடிக்கைக்கு ஆவன செய்ய
03. யாழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் - உரிய நடவடிக்கைக்கு ஆவன செய்ய
04. வட மாகாண சபை உறுப்பினர்கள் - உரிய நடவடிக்கைக்கு ஆவன செய்ய
05. அரசாங்க அதிபர்ää மன்னார். - உரிய நடவடிக்கைக்கு ஆவன செய்ய
06. அரசாங்க அதிபர் யாழ்ப்பாணம்.- உரிய நடவடிக்கைக்கு ஆவன செய்ய
07. அரசாங்க அதிபர் கிளிநொச்சி - உரிய நடவடிக்கைக்கு ஆவன செய்ய
08. பொது அமைப்புக்கள் மன்னார். - அறிந்து கொள்வதற்காக
09. பொது அமைப்புக்கள் யாழ்ப்பாணம். - அறிந்து கொள்வதற்கா
10. பொது அமைப்புக்கள் கிளிநொச்சி. - அறிந்து கொள்வதற்காக
203. ஹயாத் கிரான்ட் ஒரியன்றஸ் ஹோட்டல்ää மாந்தை உப்பளம்ää ஹம்பாந்தோட்டை உப்பளம் மற்றும் ஹில்டன் போன்ற உபாயரீதியற்ற தொழில் முயற்சிகளை 2017 இன் போது நாம் பட்டியலிடவிருக்கின்றோம். அவ்வாறு பட்டியலிடுவதன் மூலம் ஆகக்குறைந்தது ஐ.அ.டொ 1000 மில்லியனை அரசாங்கத்தினால் பெற்றுக் கொள்ள முடியும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இதனைக்கொண்டு முன்னைய அரசாங்கத்தினால் எம்மீது சுமத்தப்பட்டுள்ள பொருளாதாரத்தை நெருக்கடிக்குள்ளாக்கியுள்ள உயர் செலவுமிக்க கடன் சுமையினைத் தீர்க்கமுடியும். 2017 இன் போது பட்டியலிடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ள ஏனைய நிறுவனங்கள் பற்றி நாம் பாராளு மன்றத்திற்கு அறியத்தருவோம்.
நாம் ஓட்டுப்போட்டு தெரிவு செய்து பாராளுமன்றத்திற்கு அனுப்பிய எமது அருமையான உறுப்பினர்கள் எமது ஏகப்பிரதிநிதிகள் எமக்காக பாராளுமன்றத்தில் தூங்கிக்கொண்டு இருக்கும் போதுதான் இரண்டு தடைவைக்கு மேல் வாசிக்கப்பட்டு வருகின்ற 10ம் திகதி 03ம் வாசிப்பிற்கு உள்ளது.
தடுப்போம்.... எதிர்ப்போம்....
இரண்டு வாசிப்பிலும் எமது ஏகப்பிரதிநிதிகள் அமோக சூ சம்மதம் தெரிவித்துள்ளனரா…??? அல்லது இச்சம்பவம் அவர்களுக்கு தெரியாதா…??? என்ற கோள்வி எழுகின்றது.
என்ன கொடுமை இது..... எமக்கு தெரிந்த விடையம் இது மட்டும் தான் இன்னும் எத்தனை விடையங்கள் எமக்கு தெரியாமல் அதேபோல் எமது ஏகப்பிரதிநிதிகளுக்கு தெரியாமல் இருக்குமோ.....??? எல்லாவற்றிற்கும் கைகளை உயர்த்தியும் தலைசாய்த்தும் ஆதரவு வழங்கவேண்டியது தான் ஏன் என்றால் எமது பிரதிநிதிகளுக்கு என்ன தேவையோ அது கிடைக்கின்றது பிறகேன் அவர்கள் எங்களை எண்ணி கவலைப்படப்போகின்றார்கள் இவர்களை நம்பி கடைசியில் எமது சந்ததிக்கு நாம் கோவணம் கூடமிஞ்சாது போல மக்களே விழித்தெழுங்கள் இல்லையேல் அழித்துவிடுவார்கள்….
இதோ உங்களின் பார்வைக்காக எமது மன்னாரின்
உப்பள ஊழியர்கள்
மாந்தை சோல்ற் லிமிற்றெற்
மன்னார்.
2016.11.18
- கௌரவ இணைத் தலைவர்கள்
- கௌரவ றிசாட் பதியூதீன்- (பா.உ) அமைச்சர்
- கௌரவ. சி.வி.விக்னேஸ்வரன் - வட.மா.முதல்வர்
- கௌரவ. சாள்ஸ் நிர்மலநாதன் - பா.உ
- கௌரவ காதர் மஸ்தான்- பா.உ
- கௌரவ சிவமோகன் - பா.உ
- கௌரவ சிவ சக்தி ஆனந்தன் - பா.உ
- கௌரவ சாந்தி சிறிஸ் கந்தராசா - பா.உ
- மாவட்ட அபிவிருத்தி குழு மன்னார்.
ஐயா-அம்மணி
விலைபோக உத்தேசிக்கப்பட்டுள்ள மாந்தை சோல்ட் லிமிற்றெற்
(மன்னார் -ஆனையிறவு -குறிஞ்சாத்தீவு) உப்பளங்கள் தொடர்பாக....
வட பகுதியில் உள்ள உப்பளங்கள் அனைத்தும் மாந்தை சோல்ட் லிமிற்றெற்றின் பெயரின் கீழ் உள்ள அவற்றில் மன்னார் உப்பளம் ஆனையிறவு உப்பளங்கள் (குறிஞ்சாத்தீவு) உட்பட அனைத்து உப்பளங்களினையும் தனியார் உடமையாக்குவதற்கான ஆலோசனை நிதி அமைச்சரினால் 2016 நவம்பர் மாதம் 10ம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு முன்மொழியப்பட்டது. தற்போது இரண்டாம் கட்ட வாசிப்பும் நிறைவு பெற்று முன்றாம் கட்ட வாசிப்பை எதிர்நோக்கியுள்ள 2017ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் 203ம் இலக்க பந்தி தங்களின் மேலான கவனத்திற்காக இத்துடன் இணைக்கப்படுகின்றது.
மன்னார் உப்பளம்.
மன்னார் உப்பளம் 1938ம் ஆண்டு தொடக்கம் நீண்ட வரலாற்றைக் கொண்டது பல நிர்வாக கட்டமைப்புக்களில் இருந்து தற்போது கைத்தொழில் வணிக அமைச்சின் கீழ் இலாபத்துடன் இயங்குகின்ற உப்பளமாகும். நூற்றுக்கணக்கான குடும்பங்களின் வாழ்வாதாரத்திற்கு பங்களிப்பு செய்கின்ற உப்பளமாகும். பல மில்லியன் ரூபாய்களினை வருடாந்தம் மொத்த இலாபமாக ஈட்டித்தருவதோடு வருடாந்தம் VAT/NBT வருமான வரியாக பல மில்லியன் ரூபாய்களினை அரசிற்கு வருடாந்தம் செலுத்தி வருகின்ற மன்னார் மாவட்டத்தின் மிகப்பெரிய கைத்தொழில் நிறுவனமுமாகும்.
1990 – 2001 October வரை (உள்ளநாட்டு சண்டை நடைபெற்றுக்கொண்டிருந்த போது)
முன்னை நாள் மன்னார் மாவட்ட அரச அதிபர்களின் சிறப்பான நிர்வாக கட்டமைப்பின் கிழ் உப்பளம் பல மில்லியன் இலாபத்துடன் இயக்கப்பட்டது. பல குடும்பங்களின் வாழ்வாதாரத்திற்கு உதவி செய்யப்பட்டது. 2012/2013ல் பல மில்லியன் செலவில் கைத்தொழில் வணிக அமைச்சினால் அபிவிருத்தி செய்யப்பட்டு அதிகரிக்கப்பட்ட உப்பு உற்பத்தியுடன் பல புதிய வேலைவாய்ப்புக்களினை வழங்கி பல மில்லியன் இலாபத்தில் தற்போது மன்னார் உப்பளம் இயங்கிக்கொண்டிருக்கின்றது.
ஆனையிறவு உப்பளம்.
உள்நாட்டு சண்டைக்கு முன்பு தேசிய உப்பு உற்பத்தியில் வட பகுதியின் மிகப்பெரிய உப்பளமான ஆனையிறவு உப்பளம் ஐம்பதாயிரத்திற்கு மேற்ப்பட்ட மெற்றிக்தொன் உப்பினை உற்பத்தி செய்து தேசிய உற்பத்தியில்; குறிப்பிடத்தக்க பங்களிப்பினை செய்து அப்பகுதியில் ஆயிரக்கணக்கான குடும்பங்களின் வாழ்வாதாரத்திற்கு உதவிய உப்பளமாகும்.
நான்கு தசாப்தங்களாக உற்பத்தி மௌனிக்கப்பட்டிருந்த வடமாகாணத்தின் தாய் உப்பளம் ஆணையிறவு தற்போது மீண்டும் அபிவிருத்தி செய்து போரினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களிற்கு நிரந்தர வேலைவாய்ப்பினை வழங்கி மிகப்பெரிய உப்பு அறுவடையினை பெற்றுக்கொள்ள கைத்தொழில் வணிக அமைச்சினால் பல மில்லியன் செலவில் அபிவிருத்தி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந் நிலையில் ஆனையிறவு உப்பளத்தினையும் மன்னார் உப்பளத்தினையும் விற்பதற்கு நல்லாட்சி அரசு என்று கூறிக்;கொண்டு அரசு எடுக்கும்; நடவடிக்கையானது போரினால் பாதிக்கப்பட்ட வட பகுதி மக்களின் வாழ்வாதாரத்தினையும்ää ஏழை எளிய மக்களின் வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதாரத்தினையும்ää நீண்ட கால திட்டமிடலின் ஊடாக இல்லாதொழிக்கும் நடவடிக்கையாகவே நாம் கருதுகின்றோம்.
இது தனியார் ஒருவரின் கைக்கு செல்லுமானால் வருடா வருடம் இதன் மூலம் ஈட்டப்படுகின்ற வருமானம் தனியொரு முதலாளியினையே சென்றடையும். இதனை கொள்வனவு செய்பவர் காலப்போக்கில் உப்பளத்தினை மூடிவிட்டு வேறு வருமானம் பெற்றுக்கொள்ளும் வகையில் இக்காணிகளினை பயன்படுத்த முனையலாம் இதனால் நூற்றுக்கணக்கான ஏழைக்குடும்பங்களின் வாழ்வாதாரம் கேள்விக்குள்ளாகும்.
எதிர்பார்ப்பு
எனவே வடபகுதி மாந்தை சோல்ட் லிமிற்றெற்றின் கீழ் உள்ள மன்னார்ää ஆனையிறவு மற்றும் குறிஞ்சாத்தீவு உப்பளங்களினை அரசு அபிவிருத்தி செய்து உள்நாட்டு போரினால் பாதிக்கப்பட்ட வட பகுதி மக்களின் வாழ்வாதாரää பொருளாதார வாழ்க்கைத்தரம் மேம்பாடடைய வேலைவாய்ப்புக்களினை வழங்கி உப்பு உற்பத்தியினையும் அதனுடன் இணைந்த உப உற்பத்திகளினையும் மேலும் அதிகரிக்கக் கூடிய திட்டங்களினை உருவாக்கி நாட்டின் தேசிய உற்பத்திக்கு பங்களிப்பு செய்கின்ற வகையில் வடக்கின் உபாயரீதியான உப்பளங்களை அபிவிருத்தி செய்ய நல்லாட்சி அரசு முன்வர அழுத்தம் கொடுக்க வேண்டியது மக்களை நேசிக்கும் தலைவர்களின் தார்மிக கடமையாகும்.
வடக்கின் உப்பளங்களினை தனியார் மயப்படுத்த அரசு எடுக்கும் நடவடிக்கை வரலாற்று தவறாகும் அதனை நிறுத்துவதற்கு வடக்கின் வாக்காளர்களாக இருந்து தங்களிற்கு ஒத்துழைப்பு நல்கிய மக்களின் நலன் கருதி கட்சி வேறுபாடின்றி அழுத்தம் கொடுக்க வேண்டும் என மக்கள் பிரதிநிதிகளாகிய தங்களை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.
“எதிர்பாக்கப்படும் புதிய அரசியல் யாப்பிற்கமைவாக வட பகுதி தமிழ் பேசும் மக்களிற்கு நல்லாட்சி அரசால் சுயாட்சி வழங்கப்படும் போது வடபகுதி உபாயரீதியான உப்பளங்கள் எமக்கு நிலையான வருமானம் தரும் சொத்தாகும்.”
மன்னார். ஆணையிறவுää கொழும்பு ஊழியர்களின் கையொப்ப பிரதிகள் இத்துடன்இணைக்கப்பட்டுள்ளது.
வட மாகாண மக்களின் கையொப்பங்கள் பெறப்பட்டு விரைவில் அனுப்பி வைக்கப்படும்.
“நன்றி”
பிரதிகள்:
02. பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவர்-உரிய நடவடிக்கைக்கு ஆவன செய்ய
03. யாழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் - உரிய நடவடிக்கைக்கு ஆவன செய்ய
04. வட மாகாண சபை உறுப்பினர்கள் - உரிய நடவடிக்கைக்கு ஆவன செய்ய
05. அரசாங்க அதிபர்ää மன்னார். - உரிய நடவடிக்கைக்கு ஆவன செய்ய
06. அரசாங்க அதிபர் யாழ்ப்பாணம்.- உரிய நடவடிக்கைக்கு ஆவன செய்ய
07. அரசாங்க அதிபர் கிளிநொச்சி - உரிய நடவடிக்கைக்கு ஆவன செய்ய
08. பொது அமைப்புக்கள் மன்னார். - அறிந்து கொள்வதற்காக
09. பொது அமைப்புக்கள் யாழ்ப்பாணம். - அறிந்து கொள்வதற்கா
10. பொது அமைப்புக்கள் கிளிநொச்சி. - அறிந்து கொள்வதற்காக
203. ஹயாத் கிரான்ட் ஒரியன்றஸ் ஹோட்டல்ää மாந்தை உப்பளம்ää ஹம்பாந்தோட்டை உப்பளம் மற்றும் ஹில்டன் போன்ற உபாயரீதியற்ற தொழில் முயற்சிகளை 2017 இன் போது நாம் பட்டியலிடவிருக்கின்றோம். அவ்வாறு பட்டியலிடுவதன் மூலம் ஆகக்குறைந்தது ஐ.அ.டொ 1000 மில்லியனை அரசாங்கத்தினால் பெற்றுக் கொள்ள முடியும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இதனைக்கொண்டு முன்னைய அரசாங்கத்தினால் எம்மீது சுமத்தப்பட்டுள்ள பொருளாதாரத்தை நெருக்கடிக்குள்ளாக்கியுள்ள உயர் செலவுமிக்க கடன் சுமையினைத் தீர்க்கமுடியும். 2017 இன் போது பட்டியலிடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ள ஏனைய நிறுவனங்கள் பற்றி நாம் பாராளு மன்றத்திற்கு அறியத்தருவோம்.
மன்னார் மண்ணில் பறிபோகவுள்ள உப்பளம் விழித்தெழுங்கள் இல்லையேல் அழித்துவிடுவார்கள்….மகஜர் இணைப்பு
Reviewed by Author
on
November 19, 2016
Rating:

No comments:
Post a Comment