மன்னார் கடற் தொழில் நீரியல் வளத்துறை திணைக்களத்திற்கு புதிய உதவிப் பணிப்பாளர் நியமனம்...
மன்னார் மாவட்டத்தின் கடற்தொழில் நீரியல் வளத்துறை திணைக்களத்தின் புதிய மாவட்ட உதவிப் பணிப்பாளராக மோகன் காளிதாஸ் இன்று(18) தனது முதல் கையொப்பமிட்டு கடமையினை பொறுப்பேற்றுள்ளதாகத் தெரிய வருகின்றது.
குறித்த திணைக்களத்தில் கடமையாற்றிய நாதன் மெராண்டாவிற்கு திடீர் இடமாற்றம் கிடைக்கப்பெற்றுள்ள நிலையிலேயே முல்லைத்தீவில் கடமையாற்றிய மோகன் காளிதாஸ் நியமனம் பெற்றுள்ளார்.
எனினும் முதலில் கடமையாற்றிய நாதன் மெராண்டாவின் இடமாற்றத்தை இடைநிறுத்த வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர், மாகாண சபை உறுப்பினர் மற்றும் மீனவ கூட்டுறவு சங்க முக்கியஸ்தர் என சிலர் முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக அறிய முடிகின்றது.
மேலும், மன்னார் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட பல்வேறு மீன்பிடி முறைமைகளுக்கு நாதன் மெராண்டா குறிப்பிட்ட சிலருக்கு தன்னிச்சியாக ஆதரவை வழங்கியமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் மீனவ சமூகத்தினால் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையிலும் அரசியல் பிரமுகர்கள் அசமந்த போக்குடன் செயற்பட்டதாக மக்கள் விசனம் தெரிவித்துள்னர்.
எனினும், சில அரசியல் வாதிகள் மற்றும் கடற் தொழில் திணைக்கள பணியாளர்கள் தலையிட்டதன் காரணத்தினால் தற்போது புதிதாக நியமிக்கப்பட்டுள்ள உதவிப் பணிப்பாளரின் கடமைகள் ஸ்தம்பிதமடைந்துள்ளதாக தெரிய வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் கடற் தொழில் நீரியல் வளத்துறை திணைக்களத்திற்கு புதிய உதவிப் பணிப்பாளர் நியமனம்...
Reviewed by Author
on
November 19, 2016
Rating:

No comments:
Post a Comment