மன்னார் மாவட்டத்தில் இறால் பண்ணை அமைக்கப்படும்போது மன்னார் மாவட்ட மக்களுக்கு வேலை வாய்ப்பினை வழங்கப்பட வேண்டும் - பாராளுமன்ற ஒன்று கூடலின் போது .பா.உ. இ.சாள்ஸ் நிர்மலநாதான்
முல்லைத்தீவு மாவட்ட கொக்குளாய்-களப்பு பிரதேசத்தில் தடை செய்யப்பட்ட மீன் பிடி கருவிகளைக் கொண்டு மீன்பிடித்தலை தடை செய்ய வேண்டும் என்றும், மன்னார் மாவட்டத்தில் இறால் பண்ணை அமைக்கப்படும்போது மன்னார் மாவட்ட மக்களுக்கு வேலை வாய்ப்பினையும் மன்னார் முதலீட்டாளர்கள் அல்லது வடக்கு மாகாண முதலீட்டாளுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்றும், கடற்தொழில் அமைச்சினால் அறிமுகம் செய்யப்பட்ட கரவலை வீஞ்ச்,பேசாலை பிரதேசத்தில் கரவலை மீன்பிடி மேற்கொள்ளும் மக்களால் கடன் பெற்று கொள்வனவு செய்த கரவலை வீஞ்ச் தடையை நீக்க வேண்டும் என்றும், கடற் தொழில் அமைச்சரிடம் கடந்த 27.10.2016 அன்று பாராளுமன்ற ஒன்று கூடலின் போது கெளரவ.பா.உ. இ.சாள்ஸ் நிர்மலநாதான் அவர்கள் வேண்டுகோள்கள் விடுத்திருந்தார்.
மன்னார் மாவட்டத்தில் இறால் பண்ணை அமைக்கப்படும்போது மன்னார் மாவட்ட மக்களுக்கு வேலை வாய்ப்பினை வழங்கப்பட வேண்டும் - பாராளுமன்ற ஒன்று கூடலின் போது .பா.உ. இ.சாள்ஸ் நிர்மலநாதான்
Reviewed by NEWMANNAR
on
November 12, 2016
Rating:

No comments:
Post a Comment