அண்மைய செய்திகள்

recent
-

தமிழகமெங்கும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தொடரும் போராட்டங்கள்

ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த வேண்டுமெனக் கோரி அலங்காநல்லூர் வாடிவாசல் அருகில் போராடிவந்தவர்களை இன்று (செவ்வாய்க்கிழமை) காலையில் காவல்துறை கைதுசெய்து, தடுப்புக் காவலில் வைத்தது.
இதையடுத்து, அவர்களை விடுவிக்க வேண்டுமெனக் கோரி அலங்காநல்லூரைச் சேர்ந்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களோடு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் விஜேந்திர பிதாரி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இருந்த போதும், அவர்கள் கலைந்துசெல்லவில்லை.

இதற்கிடையில், கைதுசெய்யப்பட்டு வாடிப்பட்டி உள்ளிட்ட இடங்களில் வைக்கப்பட்டிருந்தவர்களில் கைதுசெய்யப்பட்டவர்களில் 32 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ளவர்கள் எப்போதுவேண்டுமெனாலும் செல்லலாம் மாவட்ட எஸ்பி தெரிவித்திருக்கிறார். ஆனால், அவர்கள் அங்கிருந்து வெளியேற மறுப்பதாகவும் அவர் கூறினார்.
கைதுசெய்யப்பட்டவர்கள் மீது எந்தவித வழக்கும் தொடரப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், சென்னை மெரினா கடற்கரையிலும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டங்கள் நடந்து வருகின்றன.
மேலும், சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்தூரில் தடையை மீறி ஜல்லிக்கட்டை நடத்த முயன்றவர்களை காவல்துறை தடியடி நடத்தி கலைத்தது.

சமூக ஊடகங்களில் மன்னார் இணையம் :

பேஸ்புக்கில் படித்து கருத்துக்கள் தெரிவிக்க : மன்னார் இணையம்முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : மன்னார் இணையம் ட்விட்டர்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : மன்னார் இணையம் யு டியூப்
தமிழகமெங்கும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தொடரும் போராட்டங்கள் Reviewed by NEWMANNAR on January 17, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.