அண்மைய செய்திகள்

  
-

40வருடத்திற்கும் மேலாக செய்த போராட்டம் இன்றும் தொடர்கிறது - சுரேஸ் பிரேமசந்திரன்


நாற்பது வருடங்களுக்கும் மேலாக ஆயுதப்போராட்டத்தில் ஈடுப்பட்டு எல்லாவற்றையும் இழந்து இன்றும் கூட போராடிக் கொண்டு இருக்கிறோம் என பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

எழுக தமிழ் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது மேலும் தெரிவிக்கையில்,

இன்றுடன் பத்து நாட்களுக்கும் மேலாக கேப்பாப்புலவு மக்கள் தங்களது காணிகளை விடுவிப்பதற்காக போராடிக்கொண்டு இருக்கிறார்கள்.

தமிழ் மக்களுக்கு இவ்வாறான பிரச்சினை ஏற்பட்டுள்ள இந்த நேரத்தில் எங்களுடைய தலைமைகள் எல்லாம் எங்கே போனது. எனவே அவர்களுக்கு சரியான புதிய தலைமை அவசியம்.

இதேவேளை, தமிழ் மக்கள் கௌரவமாக, பாதுகாப்பாக வாழ வேண்டுமாக இருந்தால் அவர்களது உரிமைகள் பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும் என தெரிவித்தார்.


40வருடத்திற்கும் மேலாக செய்த போராட்டம் இன்றும் தொடர்கிறது - சுரேஸ் பிரேமசந்திரன் Reviewed by Author on February 10, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.