அண்மைய செய்திகள்

recent
-

யாழ்.மாவட்ட நாடாளுமன்ற ஆசனங்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரிப்பு....


யாழ். மாவட்ட நாடாளுமன்ற ஆசனங்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

பதுளை மாவட்டத்துக்கான நாடாளுமன்ற ஆசனங்களின் எண்ணிக்கை 9இல் இருந்து 8 ஆக குறைக்கப்பட்டுள்ளது. 2016ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியலின் அடிப்படையிலேயே இந்த ஆசனக்குறைப்பு செய்யப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் யாழ். மாவட்டத்துக்கான நாடாளுமன்ற ஆசனங்களின் எண்ணிக்கை 6இல் இருந்து 7 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, வருடா வருடம் வாக்காளர் பட்டியலின் அடிப்படையில் நாடாளுமன்ற ஆசன ஒதுக்கீடுகள் தீர்மானிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

யாழ்.மாவட்ட நாடாளுமன்ற ஆசனங்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரிப்பு.... Reviewed by Author on March 30, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.