பலியானவர்களின் எண்ணிக்கை 177ஆக அதிகரிப்பு! 109 பேர் மாயம்,,,,
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையின் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 177ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
அத்துடன், 109 பேர் வரையின் காயமடைந்துள்ளதாகவும், 109 பேர் வரையில் காணாமல் போயுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அனர்த்த நிலையை அடுத்து 151,392 குடும்பங்களை சேர்ந்த 557,505 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 484 வீடுகள் முழுமையாகவும், 5227 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக எட்டு மாவட்டங்களுக்கு தொடர்ந்தும் மண் சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், மாத்தறை, காலி, இரத்தினபுரி, களுத்துறை உள்ளிட்ட மாவட்டங்கள் அனர்த்தம் காரணமாக அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பலியானவர்களின் எண்ணிக்கை 177ஆக அதிகரிப்பு! 109 பேர் மாயம்,,,,
Reviewed by Author
on
May 29, 2017
Rating:

No comments:
Post a Comment