அண்மைய செய்திகள்

recent
-

வடக்கு மாகாண கூட்டுறவாளர் மேதினம் முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் பங்கேற்பில்! (படங்கள்)

வடக்குமாகாணசபையின் வடக்குமாகாணம் தழுவிய கூட்டுறவாளர்களின் மேதின பேரணியும் மேதின போதுக்கூட்டமும் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் இன்று மாலை இடம்பெற்றது.



இராணுவசமுள்ள காணிகளை விடுவிக்கவேண்டுமெனவும் காணாமல் ஆக்கப்படடவர்களின் உறவுகளுக்கு விரைவில் நல்ல முடிவைத்தா! என்ற தொனிப்பொருள் அடிப்படையாக கொண்டு இந்த மேதின பேரணி நடைபெற்றது.

வடக்குமாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் அதிதியாக கலந்துகொண்ட இந்த மேதின பேரணி புதுக்குடியிருப்பு சிவன் ஆலய முன்றலில் முதலமைச்சர் விக்னேஸ்வரன் கொடியசைத்து ஆரம்பித்துவைக்க ஆரம்பமனது. முல்லைதீவு பரந்தன் வீதி வழியாக சென்ற பேரணி வாகன ஊர்திகள் 50 இற்கும் மேற்பட்ட அணிவகுத்து செல்ல பேரணியாக புதுக்குடியிருப்பு மத்தியக்கல்லூரி கலைவிழா அரங்கில் முடிவடைந்து அங்கே மாபெரும் பொதுக்கூட்டம் இடம்பெற்றது.



இந்த மேதின பேரணியில் வடக்குமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன்,பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் மற்றும் சிவசக்தி ஆனந்தன் வடக்குமாகாண விவசாய அமைச்சர் ஐங்கரநேசன், கல்வி அமைச்சர் குருகுலராசா, மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் அனந்தி சசிதரன், துரைராசா ரவிகரன், புவனேஸ்வரன், சிவநேசன், இந்திரராசா, தியாகராசா, கஜதீபன், சிவாஜிலிங்கம் ஆகியோர் கலந்துகொண்டனர்.



















வடக்கு மாகாண கூட்டுறவாளர் மேதினம் முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் பங்கேற்பில்! (படங்கள்) Reviewed by NEWMANNAR on May 02, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.