சம்பந்தனை கோபமடையச் செய்த அமைச்சர்! சபையில் ரணில் முன்னிலையில் வாக்கு வாதம்....
எதிர்க் கட்சித் தலைவர் இராஜவரோதயம் சம்பந்தனை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா கடும் கோபமடைய வைத்துள்ளார் என சம்பந்தனை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் அரசியலமைப்பு மீளமைப்புக்கான அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தான் மேற்படி சம்பவம் நிகழ்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இனப் பிரச்சினைக்கு தீர்வு காணும் முகமாக மேற்கொள்ளப்படும் புதிய அரசியலமைப்பு வரைவில் unitary என்ற ஆங்கிலச் சொல்லுடன், அகீயா என்ற சிங்களப் பதமும் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும் என எதிர்க் கட்சித் தலைவர் சம்பந்தன் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டார்.
ஆனால், எதிர்க் கட்சித் தலைவர் சொல்வது போன்று அவ்வாறு அமைப்பது யதார்த்த்தம் அல்ல என்று பதில் அளித்துள்ளார். இந்தப் பதில் சம்பந்தனை கடுமையாக கோபமடைய வைத்தாகவும், இதனால் அமைச்சருக்கும் சம்பந்தனுக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, சொற்களுக்கு சண்டையிடாமல் இன்றைய கால கட்டத்தில் அரசியலமைப்பு நகர்வினை வெற்றிகரமாக மேற்கொண்டு செல்வதே சிறப்பான செயல் என்றும் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
எனினும், அரசியலமைப்பினை மாற்றும் செயல் திட்டத்தினை அனைத்துலக சமூகம் ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருப்பதாக எதிர்க் கட்சித் தலைவர் சம்பந்தன் தெரிவிக்க, அதற்கு நிமல் சிறிபால டி சில்வா, அனைத்துலக சமூகத்தின் விருப்பத்துக்கேற்றவாறு செயற்படுவதற்கு தாம் ஆணை பெற்றிருக்கவில்லை என்று திருப்பி பதில் அளித்தார்.
இந்தப் பதிலால் மேலும் அவையில் கடும் வாக்குவாதங்கள் இடம்பெற்றதாக குறிப்பிடப்படுகிறது.
இதேவேளை, அரசியலமைப்பு மீளமைப்புக்கான அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
சம்பந்தனை கோபமடையச் செய்த அமைச்சர்! சபையில் ரணில் முன்னிலையில் வாக்கு வாதம்....
Reviewed by Author
on
May 28, 2017
Rating:

No comments:
Post a Comment