4 பேர் பலி,5 பேர் காயம்....சான் பிரான்சிஸ்கோவில் துப்பாக்கி சூடு
அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ மாகாணத்தில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 4 பேர் பலியாகியுள்ளதாகவும் பலர் காயமடைந்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ மாகாணத்தில் யு.பி.எஸ். கிடங்கு ஒன்றில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 4 பலர் பலியாகியுள்ளதாகவும் பலர் படுகாயமடைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சான் பிரான்சிஸ்கோவில் யு.பி.எஸ். கிடங்கு மற்றும் வாடிக்கையாளர் சேவை மையத்தை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தபட்டதாக சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கி சூட்டினை தொடர்ந்து, அந்த பகுதி முழுவதும் பொலிசார் குவிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த மக்கள், அருகாமையிலுள்ள சக்கர்பெர்க் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவத்தில் எத்தனை பேர் காயமடைந்துள்ளார்கள், மற்ற பாதிப்புகள் குறித்த முதற்கட்ட தகவல்களை போலீசார் வெளியிடவில்லை.
முன்னதாக விர்ஜினியா மாகாணத்தில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் டிரம்பின் குடியரசு கட்சி கொறடா ஸ்டீவ் படுகாயமடைந்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார்.
சமீப காலமாகவே அமெரிக்காவில் துப்பாக்கி கலாசாரம் அதிகரித்து வருவது, மக்களிடையே ஒருவித பயத்தை ஏற்படுத்தியுள்ளது.
4 பேர் பலி,5 பேர் காயம்....சான் பிரான்சிஸ்கோவில் துப்பாக்கி சூடு
Reviewed by Author
on
June 15, 2017
Rating:

No comments:
Post a Comment