அண்மைய செய்திகள்

recent
-

இலங்கை மக்களுக்கு நிதி வழங்கிய தென் கொரிய நடிகை....


இலங்கையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தங்கள் காரணமாக உயிரிழந்த மற்றும் இடம்பெயர்ந்த மக்களுக்காக தென் கொரியாவை சேர்ந்த பிரபல தொலைக்காட்சி நடிகை லீ யங் ஹி 50 ஆயிரம் அமெரிக்க டொலர்களை அன்பளிப்பு செய்துள்ளார்.

இலங்கையில் வெள்ளம் மற்றும் மண்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தனது கவலைகளை வெளியிட்டுள்ள லீ யங், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்காக நேற்று (05) 56 இலட்சம் கொரிய வொன்களை வழங்கியுள்ளார்.

இந்த நடிகை நடித்த தொலைக்காட்சி நாடகம் சுஜாதா தியனிய என்ற பெயரில் சிங்களத்தில் மொழிப்பெயர்க்கப்பட்டு இலங்கையில் ஒளிப்பரப்பாகி வருகிறது.

சங்கும் என்ற பிரதான பாத்திரத்தில் இந்த நடிகை அதில் நடித்துள்ளார்.

இந்த நிதியுதவியை தென் கொரியாவின் சியோல் நகரில் உள்ள இலங்கை தூதரகத்தில், கொரிய நிதியத்தின் தலை லீ சியோங்க் தூதரக அதிகாரி ஒருவரிடம் கையளித்துள்ளார்.

இலங்கை மக்களுக்கு நிதி வழங்கிய தென் கொரிய நடிகை.... Reviewed by Author on June 06, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.