அண்மைய செய்திகள்

recent
-

இரணைமடுகுளத்தின் சிறுபோக நெற்செய்கை வெற்றிகரமாக நிறைவு....


கிளிநொச்சி - இரணைமடுக் குளத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டிருந்த சிறுபோக நெற்செய்கை வெற்றிகரமாக நிறைவு பெற்று அறுவடைகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பாக இரணைமடு கமக்கார அமைப்புகளின் சம்மேளனச் செயலாளர் எஸ்.சிவமோகன் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு காலபோகத்தின் விதை நெல்லிற்காக 900 ஏக்கரில் நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இரணைமடுக் குளம் முழுமையாக வற்றி நீர்ப்பாசன நெருக்கடி ஏற்பட்ட போது பயிர்ச் செய்கை பாதிப்புக்குள்ளாகலாம் என்ற நிலையில் நீர்ப்பாசனத் திணைக்களமும் விவசாயிகளும் இணைந்து இரணைமடுக் குளத்தின் வாய்க்கால்களை ஆழப்படுத்தி இறுதிக்கட்ட நீர்ப்பாசன முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

அத்துடன், மழை வீழ்ச்சி இடம்பெற்றமை சிறுபோக நெற்செய்கையினை வெற்றிகரமாக நிறைவு செய்வதற்கு காரணமாக அமைந்து விட்டது என அவர் கூறியுள்ளார்.

மேலும், நான்கு, ஐந்து நாட்களில் அறுவடை நடைபெற்று முடிந்து விடும் எனவும் இரணைமடு கமக்கார அமைப்புகளின் சம்மேளனச் செயலாளர் எஸ்.சிவமோகன் குறிப்பிட்டுள்ளார்.

இரணைமடுகுளத்தின் சிறுபோக நெற்செய்கை வெற்றிகரமாக நிறைவு.... Reviewed by Author on August 27, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.