அண்மைய செய்திகள்

recent
-

இலங்கைக்கு செங்குத்தாக பயணிக்கும் சூரியன்! வடக்கிற்கு அதிக ஆபத்து


இன்றிலிருந்து செப்டம்பர் மாதம் 6ஆம் திகதி வரை இலங்கைக்கு செங்குத்தாக சூரியன் பயணிக்கவுள்ளது.

இதன்படி, நாளை நாவலடி, சாலை, பெரிய பரந்தன் ஆகிய இடங்களில் நண்பகல் 12.12 மணிக்கு சூரியன் உச்சம் கொடுக்கும் என வளி மண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனால் வடக்கில் மேலும் வெப்பநிலை அதிகரிக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

நாளையும் நாளை மறுதினமும் நாட்டின் தென்மேற்குப் பிரதேசங்களில் தற்போது நிலவும் மழையுடன் கூடிய காலநிலை சற்று அதிகரிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வடமேல் மாகாணத்திலும் அம்பாந்தோட்டை மாவட்டத்திலும் பல இடங்களில் மழை பெய்யலாம்.

இடையிடையே நாட்டை ஊடறுத்து குறிப்பாக வடக்கு, வடமத்திய. வடமேல், கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களிலும், மாத்தறை, அம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் வீசும் காற்றின் வேகம் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீற்றராக இருக்கும் என்றும் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

இதேவேளை யாழில், காரைநகர் வியாவில் பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த குடும்பஸ்தர் அதிக வெப்பம் காரணமாக திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்திருந்தார்.

இந்த நிலையில் தற்போது இலங்கைக்கு செங்குத்தாக சூரியன் பயணிக்கவுள்ளதால் இலங்கைக்கு நேரடியான வெப்பநிலை கிடைக்கப்பெறும். இதனால் வடக்கிற்கு அதிக பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. ஆகவே மக்களை பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இலங்கைக்கு செங்குத்தாக பயணிக்கும் சூரியன்! வடக்கிற்கு அதிக ஆபத்து Reviewed by Author on August 29, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.