2015இல் இலங்கை விமான நிலையத்தில் பரிசுத்த பாப்பரசரின் மனநிலை....மன்னாரிலும்
இலங்கையில் தமிழ் மற்றும் சிங்கள மக்கள் அனைவரும் இணைந்து நாட்டு பிரச்சினையை தீர்த்துக் கொள்ள வேண்டும் என பரிசுத்த பாப்பரசர் முதலாம் பிரான்ஸிஸ் தெரிவித்ததாக மன்னார் மறை மாவட்ட அருட்தந்தையும், மனித உரிமைகள் பணியாளருமான ஜெயபாலன் குரூஸ் தெரிவித்துள்ளார்.
ஐ.நா மனித உரிமைப் பேரவையின் 36ஆவது கூட்டத்தொடர் ஜெனீவாவில் நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொண்டு எமது செய்தி சேவைக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில், விமான நிலையத்தில் வைத்து அனைத்து மக்களும் இணைந்து அதாவது, தமிழ் மற்றும் சிங்கள மக்கள் இணைந்து நாட்டு பிரச்சினையை தீர்க்க வேண்டும் என தெரிவித்துள்ளார். அத்துடன் மன்னாரிலும் இதனையே வேறொரு விதமாக “நாம் அனைவரும் அனையின் பிள்ளைகள்” என சுட்டிக்காட்டியுள்ளதாக அருட்தந்தை ஜெயபாலன் குரூஸ் குறிப்பிட்டுள்ளார்.
2015இல் இலங்கை விமான நிலையத்தில் பரிசுத்த பாப்பரசரின் மனநிலை....மன்னாரிலும்
Reviewed by Author
on
September 23, 2017
Rating:

No comments:
Post a Comment