ஐ.பி.எல். ஒளிபரப்பு உரிமம்: ரூ.16 ஆயிரம் கோடிக்கு ஏலம் எடுத்தது ஸ்டார் இந்தியா...
அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு ஐ.பி.எல் தொடர்களை ஒளிபரப்பும் உரிமத்தை ஸ்டார் இந்தியா நிறுவனம் ரூ.16,347.50 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது.
ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இதுவரை 10 சீசன் முடிந்துவிட்டது. இந்த 10-வது சீசன் வரை ஐ.பி.எல். போட்டிக்கான ஒளிபரப்பும் உரிமையை சோனி நிறுவனம் பெற்று இருந்தது.
இதையடுத்து அடுத்த 5 ஆண்டுகளுக்கு ஐ.பி.எல். தொடரை ஒளிபரப்பும் உரிமத்துக்கான ஏலம் இன்று நடைபெற்றது.
மும்பையில் பிசிசிஐ நடத்திய இந்த ஏலத்துக்கான போட்டியில் 20-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இருந்தன.
2018 முதல் 2022 வரை ஐ.பி.எல். ஒளிபரப்பு உரிமத்தை ஸ்டார் இந்தியா நிறுவனம் ரூ.16,347.50 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது. ஐ.பி.எல். ஏற்கனவே ஐ.பி.எல். டைடில் ஸ்பான்சர் மூலம் கிரிக்கெட் வாரியம் ரூ.2,199 கோடி பெற்று இருந்தது.
முன்னதாக இந்த ஏலம் கடந்த 28-ந்தேதி நடைபெற இருந்தது. சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கால் தாமதம் ஆனது. சுப்ரீம் கோர்ட்டு ஏலத்தை நடத்த அனுமதி அளித்ததை தொடர்ந்து செப்டம்பர் 4-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
ஐ.பி.எல். ஒளிபரப்பு உரிமம்: ரூ.16 ஆயிரம் கோடிக்கு ஏலம் எடுத்தது ஸ்டார் இந்தியா...
Reviewed by Author
on
September 06, 2017
Rating:

No comments:
Post a Comment