அண்மைய செய்திகள்

recent
-

மூட்டு வலி நிவாரணம் தரும் முடக்கத்தான் ரசம்


மூட்டு வலியில் இருந்து நிவாரணம் தரும் வல்லமை பெற்றது முடக்கத்தான் கீரை. இன்று இந்த கீரையை வைத்து சூப்பரான ரசம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

மூட்டு வலி நிவாரணம் தரும் முடக்கத்தான் ரசம்
தேவையான பொருட்கள் :

முடக்கத்தான் கீரை - ஒரு கைப்பிடியளவு,
புளி - நெல்லியளவு,
உப்பு - தேவைக்கு
பூண்டு - 5 பல்,
காய்ந்த மிளகாய் - 3,
மஞ்சள் தூள் - சிட்டிகை
மிளகு சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன்,
நெய், கடுகு, கறிவேப்பிலை - சிறிதளவு.

செய்முறை :

புளியை ஊற வைத்து கரைத்து கொள்ளவும்.

பூண்டுடன் மிளகாய் சேர்த்து விழுதாக அரைக்கவும்.

கீரையை கழுவி தண்ணீர் சேர்த்து வேக விடவும். ஆறிய பின் வடிகட்டி தண்ணீரை மட்டும் எடுக்கவும்.

முடக்கத்தான் வடிகட்டிய தண்ணீருடன் புளி கரைசல், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க விடவும்.

பிறகு அரைத்த பூண்டு மிளகாய் விழுது, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கவும்.

மற்றொரு வாணலியில் நெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து ரசத்துடன் கலந்து சூடாக சாதத்துடன் பரிமாறலாம்.

சூப்பரான முடக்கத்தான் ரசம் ரெடி.




மூட்டு வலி நிவாரணம் தரும் முடக்கத்தான் ரசம் Reviewed by Author on September 02, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.