அண்மைய செய்திகள்

recent
-

"50 வீதத்துக்கும் மேற்பட்ட பெண்கள் வன்முறைக்குள்"


"50 வீதத்துக்கும் மேற்பட்ட பெண்கள் வன்முறைக்குள்"   இலங்­கை­யி­லுள்ள பெண்­க­ளில் பாதிக்­கும் மேற்­பட்­டோர் ஏதாவது ஒரு­வ­கை­யான வன்­மு­றையை அனு­ப­வித்­துள்­ள­தாக ஆய்­வு­கள் தெரி­விக்­கின்­றன.    இந்­தப் பிரச்­சினை குறித்த பகி­ரங்க பொதுக் கலந்­து­ரை­யா­ட­லில் நடத்­தப்­ப­டாமை பெரிய குறை­பா­டாக உள்­ளது.    இவ்­வாறு ஐரோப்­பிய ஒன்­றி­யத் தூது­வர் டுங்­லாசே மார்­கியு தெரி­வித்­துள்­ளார்.    பெண்­க­ளுக்கு எதி­ரான வன்­மு­றையை ஒழிப்­ப­தற்­கான பன்­னாட்­டுத் தினத்தைக் குறிக்­கும் நோக்­கு­டன் ஐரோப்­பிய ஒன்­றியத் தூதுக்"

இலங்­கை­யி­லுள்ள பெண்­க­ளில் பாதிக்­கும் மேற்­பட்­டோர் ஏதாவது ஒரு­வ­கை­யான வன்­மு­றையை அனு­ப­வித்­துள்­ள­தாக ஆய்­வு­கள் தெரி­விக்­கின்­றன. இந்­தப் பிரச்­சினை குறித்த பகி­ரங்க பொதுக் கலந்­து­ரை­யா­ட­லில் நடத்­தப்­ப­டாமை பெரிய குறை­பா­டாக உள்­ளது. இவ்­வாறு ஐரோப்­பிய ஒன்­றி­யத் தூது­வர் டுங்­லாசே மார்­கியு தெரி­வித்­துள்­ளார். பெண்­க­ளுக்கு எதி­ரான வன்­மு­றையை ஒழிப்­ப­தற்­கான பன்­னாட்­டுத் தினத்தைக் குறிக்­கும் நோக்­கு­டன் ஐரோப்­பிய ஒன்­றியத் தூதுக் குழு­வால் காணொலி தயா­ரிக்­கப்­பட்­டுள்­ளது.

இது தொடர்­பில் விளக்­க­ம­ளிக்­கும் ஊடக சந்­திப்பு கொழும்­பில் நடை­பெற்­றது. இந்­தச் சந்­திப்­பி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு கூறி­னார். அவர் மேலும் தெரி­வித்­தா­வது:பாட­சா­லை­க­ளில் சிறு­வர்­க­ளுக்கு நன்கு கற்­பித்­தல் மற்­றும் தக­வ­ல­றி­வித்­த­லி­லி­ருந்து பெண்­கள் மற்­றும் சிறு­மி­ய­ருக்கு எதி­ரான வன்­மு­றையைத்தடுத்­தல் ஆரம்­ப­மா­கின்­றது.

பெண்­க­ளின் உரி­மை­க­ளுக்­கான தூது­வர்­க­ளா­கு­ வ­தற்கு குமார் சங்­கார மற்­றும் மகேல ஜெய­வர்­தன ஆகி­யோர் இணக்­கம் தெரி­வித்­த­போது நாம் மகிழ்­வுற்­றோம்.  ஆழ­மாக வேரூன்­றி­யுள்ள பிரச்­சி­னை­கள் பற்­றிய அத்­த­கைய முன்­மா­தி­ரி­க­ளி­ட­மி­ருந்து இலங்கை ஆண்­கள் செவி­ம­டுக்­க­வேண்­டி­யது மிக­வும் முக்­கி­ய­மா­கும்.


"50 வீதத்துக்கும் மேற்பட்ட பெண்கள் வன்முறைக்குள்" Reviewed by Author on October 20, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.