யாழ். துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் திடுக்கிடும் பிரேத பரிசோதனை அறிக்கை
யாழ்ப்பாணத்தில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த இளைஞனின் உடற்கூற்றுப் பரிசோதனையில், துப்பாக்கிச் சன்னம் நெற்றியில் பாய்ந்து, தலைக்குள் ஊடுருவி மூளையைத் துளைத்துச் சென்றமையாலேயே மரணம் சம்பவித்துள்ளது எனத் தெரியவந்துள்ளது.
யாழ்ப்பாணம், அல்லைப்பிட்டி பகுதியில் பொலிஸாரின் கட்டளையை மீறிப் பயணித்த வாகனத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில், வட்டுக்கோட்டைப் பகுதியைச் சேர்ந்த அல்பினோ அருள் பயாஸ் என்ற 17 வயதுடைய இளைஞன் உயிரிழந்துள்ளான்.
குறித்த இளைஞனின் உடற்கூற்றுப் பரிசோதனை, யாழ். போதனா வைத்தியசாலையில் நேற்று சட்ட வைத்திய அதிகாரி எம். மயூரதன் முன்னிலையில் நடைபெற்றது.
இதன்போது, துப்பாக்கிச் சன்னம் இளைஞனின் நெற்றியில் பட்டு ஊடுருவி, மூளையைத் தாக்கியமையாலேயே மரணம் சம்பவித்துள்ளது என உடற்கூற்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Reviewed by Vijithan
on
February 11, 2026
Rating:


No comments:
Post a Comment