ஜெயலலிதா கையெழுத்திட்ட கடிதம்! புது ஆதாரம் வெளியானது
தமிழகத்தின் முன்னாள் மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் நீடித்து வரும் நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது ஆளுநர் கடிதம் எழுதியுள்ளார்.உடல்நலக்குறைவால் கடந்தாண்டு செப்டம்பர் 22ம் திகதி அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மறுநாள் ஆளுநர்வித்யாசாகர் ராவுக்கு ஜெயலலிதா கையெழுத்திட்ட கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
இதை ஜெயலலிதா சுயநினைவுடன்தான் இருந்தார் என்பதற்கான ஆதாரமாக எடுத்துக் கொண்டாலும், மருத்துவமனையில் அனுமதித்தபோது சுயநினைவில் இல்லை என அப்பல்லோ தகவல்கள் தெரிவிக்கின்றன.எது நிஜம் என்பதை சசிகலா தரப்பும், அப்பல்லோ தரப்பும் விளக்கம் அளித்தால் மட்டுமே உண்மை வெளிச்சத்துக்கு வரும்.
ஜெயலலிதா கையெழுத்திட்ட கடிதம்! புது ஆதாரம் வெளியானது
Reviewed by Author
on
October 19, 2017
Rating:

No comments:
Post a Comment