அண்மைய செய்திகள்

recent
-

வாக்குமூலம் வழங்க கொழும்புக்கு வர முடியாது:வி.எஸ்.சிவகரன்


கொழும்பு பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவுக்கு தன்னை விசாரனைக்கு வர அழைப்பு விடுக்கப்பட்டுள்ள போதும், கொழும்பு செல்ல முடியாத நிலை உள்ளதாகவும், மன்னார்  வந்து விசாரணைகளை மேற்கொள்ளுமாறு மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் தெரிவித்துள்ளார்.
கொழும்பு பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவின் பணிப்பாளருக்கு நேற்று அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்படுவதாவது,எதிர்வரும் 2 ஆம் திகதி திங்கட்கிழமை கொழும்பு பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவிற்கு விசாரணைக்கு வருகை தருமாறு 21.09.2017 திகதியிடப்பட்ட கடிதம் 27.09.2017 அன்று எனக்கு கிடைக்கப்பெற்றது.எனவே நீண்ட தூரம் பயணம் செய்யக்கூடிய அளவில் தற்போது எனது உடல் நிலை சீரின்மையால் அந்த திகதியில் வருகை தர முடியவில்லை என்பதை தங்களுக்கு அறியத்தருவதுடன், அவசரமாக எனது வாக்கு மூலம் தேவையெனில் மன்னார் பொலிஸ் நிலையமூடாக ஏற்பாடு செய்தால் வழங்க தயாராக இருக்கின்றேன் என்பதனையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆகவே நான் அறம் சார்ந்த வெளிப்படைத் தன்மையுள்ள சமூக செயற்பாட்டாளன் என்பதால் தங்கள் அழைப்பைக் கண்டு அச்சப்பட்டுக் கொள்ளவில்லை என்பதையும் தங்களிற்கு தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன் என அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வாக்குமூலம் வழங்க கொழும்புக்கு வர முடியாது:வி.எஸ்.சிவகரன் Reviewed by Author on October 01, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.