அண்மைய செய்திகள்

recent
-

தமிழர்களை நிம்மதியாக வாழவிடாத இலங்கை கடற்படை; 9 மீனவர்கள் சிறைபிடிப்பு!


புதுக்கோட்டை: தமிழக மீனவர்கள் 9 பேரை, இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

தமிழக மீனவர்கள் வங்கக்கடலில் மீன்பிடிக்கும் போது, ஆழ்கடல் பகுதியை நோக்கி செல்கின்றனர். அப்போது சர்வதேச கடல் எல்லை அருகே செல்லும் சூழல் உருவாகிறது. இதனைத் தொடர்ந்து கச்சத்தீவு, நெடுந்தீவு பகுதிகளுக்கு அருகே வந்ததாக இலங்கை கடற்படையினர் குற்றம்சாட்டுகின்றனர்.

அதுமட்டுமல்லாமல் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்துகின்றனர். மேலும் தமிழக மீனவர்களைக் கைது செய்து, அவர்களது படகுகளையும் பறிமுதல் செய்துவிடுகின்றனர். இதனால் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து மத்திய, மாநில அரசுகளிடம் பலமுறை முறையிட்டும், எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினத்தை சேர்ந்த 9 மீனவர்கள், ராமநாதபுரத்தை சேர்ந்த 4 மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.

தமிழர்களை நிம்மதியாக வாழவிடாத இலங்கை கடற்படை; 9 மீனவர்கள் சிறைபிடிப்பு! Reviewed by Author on November 02, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.