அண்மைய செய்திகள்

recent
-

ஏவுகணை சோதனை நடத்திய வடகொரியா! எச்சரிக்கை விடுத்த அமெரிக்கா -


வடகொரியா தற்போது மேற்கொண்டுள்ள ஏவுகணை சோதனைக்கு, பதிலடி கொடுக்கும் விதமாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கருத்து தெரிவித்துள்ளார்.
வடகொரியா நேற்று பலிஸ்டிக் வகை ஏவுகணை சோதனை ஒன்றை மேற்கொண்டது. அந்த ஏவுகணையானது 4 ஆயிரத்து 475 கி.மீற்றர் உயரத்துக்கு செங்குத்தாக பாய்ந்து, 53 நிமிடங்களில் 960 கி.மீற்றர் தொலைவுக்கு பறந்து, ஜப்பான் கடலில் விழுந்தது.

இதுவரை வடகொரியா சோதனை மேற்கொண்டுள்ள ஏவுகணைகளில் இதுவே மிகவும் சக்தி வாய்ந்தது எனவும் Hwasong-15 என பெயரிடப்பட்டுள்ள குறித்த ஏவுகணையானது அமெரிக்கா மற்றும் பிரித்தானியாவின் முக்கிய நகரங்களை சென்று தாக்கும் வலிமை கொண்டது என செய்திகள் வெளியாகியது.

இந்நிலையில் இது குறித்து அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், இந்த சூழ்நிலையை எங்களுக்கு கையாளத் தெரியும் என்று கூறியுள்ளார்.
ஏவுகணை சோதனை நடத்திய வடகொரியா! எச்சரிக்கை விடுத்த அமெரிக்கா - Reviewed by Author on November 30, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.