அண்மைய செய்திகள்

recent
-

ஈழ அகதிகள் உள்ளிட்டோருக்கு நியூசிலாந்து கொடுக்கும் வாய்ப்பை நிராகரித்தது அவுஸ்திரேலியா! -


அவுஸ்திரேலியாவில் தவிக்கும் ஈழ அகதிகள் உள்ளிட்ட 600க்கும் மேற்பட்டோரை நியூசிலாந்தில் குடியமர்த்துவதற்கான சலுகையை அவுஸ்திரேலியப் பிரதமர் Malcolm Turnbull மறுத்துள்ளதாக அவுஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பப்புவா நியூ கினியிலுள்ள மனுஸ்தீவு தடுப்பு முகாம் மூடப்பட்டதைத் தொடர்ந்து ஈழ அகதிகள் உள்ளிட்ட 600க்கும் மேற்பட்டோர் நிர்க்கதியான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் அகதிகளின் நிலை தொடர்பில் தாம் மிகுந்த கவலையடைந்துள்ளதாக நியூசிலாந்து பிரதமர் Jacinda Ardern தெரிவித்துள்ளதாக New Zealand Herald பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்ததுடன், இது தொடர்பில் அவுஸ்திரேலிய பிரதமரிடம் உரையாடவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

அந்த வகையில், கடந்த 2013ஆம் ஆண்டு நியூசிலாந்து பிரதமராக இருந்த John Key, அவுஸ்திரேலிய அரசு விரும்பினால், வருடமொன்றுக்கு தடுப்பு முகாம்களிலுள்ள 150 அகதிகளை தமது நாடு ஏற்றுக்கொள்ளத் தயார் என அறிவித்திருந்த நிலையில், இச்சலுகை இன்னமும் நடைமுறையில் இருப்பதாகவும், அவுஸ்திரேலியா இதனைப் பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் நியூசிலாந்து பிரதமர் Jacinda Ardern தெரிவித்துள்ளார்.
நியூசிலாந்து பிரதமராக பொறுப்பேற்றதன் பின், தனது முதலாவது உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு, இன்று சிட்னி சென்ற நியூசிலாந்து பிரதமர் Jacinda Ardern, அவுஸ்திரேலிய பிரதமர் Malcolm Turnbull உடன் மனுஸ் அகதிகள் விடயம் தொடர்பில் கலந்துரையாடும் போதே இதை குறிப்பிட்டார்.

எனினும் குறித்த சலுகையை அவுஸ்திரேலிய பிரதமர் Malcolm Turnbull மறுத்துள்ளதுடன், தற்போதைக்கு இவ்வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்ள முடியாது என தெரிவித்துள்ளார். படகு மூலம் வந்தவர்களை நியூசிலாந்தில் குடியமர்த்தினால் ஆட்கடத்தல்காரர்கள் தமது வியாபாரத்தை மீண்டும் ஆரம்பிப்பதற்கு அது வழிகோலும் என நியூசிலாந்து பிரதமர் Jacinda Ardernஇடம் தெரிவித்துள்ளார்.
ஈழ அகதிகள் உள்ளிட்டோருக்கு நியூசிலாந்து கொடுக்கும் வாய்ப்பை நிராகரித்தது அவுஸ்திரேலியா! - Reviewed by Author on November 05, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.