அண்மைய செய்திகள்

recent
-

கொய்யாப்பழம் பறிக்கச் சென்ற சிறுவன் சடலமாக மீட்கப்பட்ட சோகம் -


திம்புள்ளை, பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட போகாவத்தை தோட்டத்தில் கொய்யாப்பழம் பறிக்கச் சென்ற 6 வயது சிறுவன் போகாவத்தை ஓயாவில் இருந்து இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். போகாவத்தை தோட்டத்தைச் சேர்ந்த, தரம் ஒன்றில் கல்வி பயிலும் ஆறு வயதுடைய ராஜேந்திரகுமார் அஸ்வின் என்ற சிறுவனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நேற்று மாலை 5 மணிமுதலில் இருந்து சிறுவனை வீட்டில் காணாததால் உறவினர்களும், தோட்ட மக்களும் தேடுதலில் ஈடுபட்டுள்ளனர், இதன்போது குறித்த சிறுவன் வீட்டின் அருகில் உள்ள போகாவத்தை ஓயாவில் சடலமாக காணப்படுவது

அவதானிக்கப்பட்டுள்ளது.அதனைத் தொடர்ந்து, பத்தனை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து சடலத்தை மீட்ட பொலிஸார் கொய்யாப்பழம் பறிக்க சென்றபோது தவறி ஆற்றில் வீழ்ந்திருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.

அத்துடன் ஹட்டன் மாவட்ட நீதிமன்ற நீதிபதி பார்வையிட்டதன் பின்னர் சடலம் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும், குறித்த சிறுவனின் மரணம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பத்தனை பொலிஸார் மேற்கொண்டுவருவதாக தெரிவித்துள்ளனர்.


கொய்யாப்பழம் பறிக்கச் சென்ற சிறுவன் சடலமாக மீட்கப்பட்ட சோகம் - Reviewed by Author on November 12, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.