அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் மாணவர்களை ஏமாற்றும் சில தனியார் கல்விநிலையங்கள்.....

கல்வி வியாபாரமாகிப்போனதின் விளைவு......

பாடசாலையில் மட்டும் கல்விகற்று, மன்னாரில் சிறந்த க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகளை பெற்ற மாணவர்களின் பெறுபேறுகளை போட்டிபோட்டு விளம்பரப்படுத்தி மாணவர்களையும் பெற்றோரையும் குழப்பி சுயலாபம் பெறும் தனியார் கல்விநிலையங்கள்...

2017 ம் ஆண்டுக்கான  க.பொ.த. உயர்தர பரீட்சை பெறுபேறுகள் அண்மையில் வெளியாகியது, இதனடிப்படையில் சிறந்த பெறுபேறுகளை பெற்று பல்கலைக்கழகம் தெரிவாகிய மன் முருங்கன் மகாவித்தியாலயம், வங்காலை ஆனாள் மகாவித்தியாலயம் போன்ற பாடசாலையின் மாணவர்கள் தனியார் கல்விநிலையங்களுக்கு செல்லாது, தமது பாடசாலையின் ஆசிரியர்களை மட்டும் நம்பி அவர்களிடம் பாடசாலையில் மட்டும் கல்வி கற்று சிறந்த பெறுபேறுகளை பெற்றுள்ளனர். இத்தகைய மாணவர்களின் பெறுபேறுகளைதனியார் கல்விநிலையங்கள் முதலில் விளம்பரப்படுத்தி குறித்த பாடசாலையின் ஆசிரியர்களையும் மாணவர்களையும் விரக்தியடையச்செய்தது. அத்துடன் இவ்வாறான போலி விளம்பரங்களை நம்பி புதிய மாணவர்கள் சிலர் இத்தகைய தனியார் கல்வி நிலையங்களில் இணைந்தும் உள்ளனர்

அது மட்டும் இன்றி, கணித விஞ்ஞான பிரிவுகளில் சில மாணவர்கள் யாழ்ப்பாணம் சென்று  அங்குள்ள சில கல்விநிலையங்களில் கற்று இரண்டாம் தடவை பரீட்சைக்கு தோற்றி சிறப்பான பெறுபேறுகளை பெற்றுள்ளனர்... இத்தகைய மாணவர்களின் பெறுபேறுகளை இத்தகைய கல்விநிலையங்கள் உரிமைகோரி விளம்பரப்படுத்தியுள்ளமையானது மாணவர்களையும், பாடசாலை ஆசிரியர்களையும், பெற்றோரையும் மேலும் கோபமடைய வைத்துள்ளது.

மன்னாரில் தற்போது கல்வி மிகவேகமாக வளர்ச்சி பெற்று வருகின்றமையானது அனைவராலும் வரவேற்கத்தக்க விடயமாகவுள்ள அதே நேரத்தில், தனியார் கல்விநிலையங்களின் இலாப நோக்கம்கொண்ட இத்தகைய செயல்பாடுகள் மாணவர்களின் சிறந்த பெறுபேறுகளுக்கு பாடசாலைகளின் பங்களிப்பு மிக குறைவாக உள்ளதா....???
என்று பெற்றோர்கள் கருதும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்

மேலும் இத்தகைய தனியார் கல்விநிலையங்களை நடத்தும் உரிமையாளர்கள் மன்னார் வலயக்கல்வி அலுவலகத்தில் பணியாற்றுவதாகவும், அவர்கள் பாடசாலைகளுக்கு சென்று மாணவர்களையும் ஆசிரியர்களையும் வழிநடத்துவதாக கூறி தமது தனியார் கல்விநிலையங்களுக்கு மாணவர்களை சேர்ப்பத்தற்கான விளம்பரங்களையே மேற்கொள்கின்றனர் என்ற பாரிய குற்றசாட்டை பாடசாலை ஆசிரியர்களும், மாணவர்களும், பெற்றோரும் முன்வைக்கின்றனர்....

எனவே இவ்வாறான போலி விளம்பரங்களை மேற்கொண்டு மாணவர்களை குழப்பி சுயலாபம் பெறும் செயற்பாடுகளை மேற்கொள்ளும் தனியார் கல்விநிலையங்களின் இத்தகைய செயல்பாடுகளை மன்னார் வலயக்கல்வி பணிப்பாளரும், குறித்த பாடசாலையின் அதிபர்களும், சமூக ஆர்வலர்களும் கட்டுப்படுத்தும் செயல்பாடுகளை மேற்கொள்ள வேண்டுமென்று அனைவரையும் கேட்டுக்கொள்கின்றோம்.



சம்மந்தப்பட்டவர்கள் உடனடியாக இவ்வாறான இழிவான செயலை உடனே நிறுத்தி பாதிப்படைந்துள்ள மாணவமாணவிகளின் நலன்பேணவும்  இவ்வாறான அநாகரிக செயற்பாடுகள் தொடருமானால்  ஊடக தர்மம் கருதி  பெயர்கள் மேலதிக தகவல்கள் வெளியிடவில்லை அவற்றினை வெளியிட வேண்டிய கட்டாய சூழலுக்கு எம்மை உட்படுத்த வேண்டாம்.
சம்மந்தப்பட்ட தனியார் கல்வி நிறுவனங்கள்  உடனடியாக நல்ல தீர்வை முன்வைக்கவேண்டும்.


மாணவர் ஒருவர் தனது முகப்புத்தகத்தில் உள்ளக்குமுறலை பதிவிட்டவேளை.





மன்னாரில் மாணவர்களை ஏமாற்றும் சில தனியார் கல்விநிலையங்கள்..... Reviewed by Author on January 12, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.