சுவிட்ஸர்லாந்தில் 13 தமிழர்கள் மீதான விசாரணை: வெளியாகியுள்ள சில தகவல்கள் -
தமிழீழ விடுதலை புலிகளுக்கு நிதி திரட்டிய விவகாரம் தொடர்பாக 13 பேர் சுவிட்ஸர்லாந்து நீதிமன்றத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் சில தகவல்கள் வெளிவந்துள்ளன.
சுவிட்ஸர்லாந்து நீதித்துறை வரலாற்றில் மிக முக்கியத்துவம் வாய்ந்த மிகப்பெரிய வழக்காக இது கருதப்படுகின்றது.
குறித்த 13 நபர்களும் சுவிட்ஸர்லாந்தில் உள்ள தமிழர்களிடம் இருந்து சுமார் 15 மில்லியன் பிராங்க்ஸ் திரட்டியுள்ளதாகவும், அவர்கள் சுவிட்சர்லாந்து, ஜேர்மனியில் வாழும் இலங்கையர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்கள், சுவிட்ஸர்லாந்தில் மட்டும் இலங்கைத் தமிழர்கள் சுமார் 50,000 பேர் வாழ்ந்து வருகின்றனர்.
இவர்களே தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்புக்கு முக்கிய பொருளாதார மையமாக இருந்துள்ளதாகவும் சுவிஸ் ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்புக்கு சுவிட்ஸர்லாந்தில் தடைவிதிக்கப்படவில்லை என்றபோதும், Bellinzona நீதிமன்ற தீர்ப்புக்கு பின்னர் அரசின் முடிவுக்கு மாற்றம் வரலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
சுவிட்ஸர்லாந்தில் 13 தமிழர்கள் மீதான விசாரணை: வெளியாகியுள்ள சில தகவல்கள் -
Reviewed by Author
on
January 11, 2018
Rating:

No comments:
Post a Comment