அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் வர்த்தகர்கள் கோரிக்கை -மூடப்பட்டுள்ள பொதுச்சந்தையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை...


மன்னார், வெள்ளாங்குளம் சந்திப்பகுதியில் மூடப்பட்ட நிலையில் காணப்படும் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பொதுச்சந்தையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துத்தருமாறு அப்பகுதி வர்த்தகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குறித்த பகுதியில், புதிதாக நிர்மாணிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்ட பொதுச்சந்தை கட்டடத்தில் தமது பொருட்களை பாதுகாக்க முடியாத நிலையில் வர்த்தகர்கள் தமது நடவடிக்கைகளை கைவிட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து குறித்த பொதுச்சந்தை மூடப்பட்ட நிலையில் காணப்படுகின்றது. மன்னார், வெள்ளாங்குளம் சந்திப்பகுதியில் மன்னார் மாவட்டத்தின் அபிவிருத்திக்கான திட்டமிடல் மற்றும் மீள்குடியமர்ந்த சமூகத்திற்கான புனரமைப்புத் திட்டத்தின் கீழ் பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் ஜப்பான் சர்வதேச கூட்டுறவு முகவர் ஜெய்க்கா திட்டத்தின் மூலம் பல மில்லியன் ரூபா செலவில் குறித்த சந்தை அமைக்கப்பட்டது.
எனினும், குறித்த சந்தையானது தற்போது மூடப்பட்ட நிலையில் பற்றைகள் வளர்ந்தும், கால்நடைகளினதும் உறைவிடமாகக் காணப்படுகின்றது.

குறித்த சந்தையானது பொருத்தமான இடத்தில் அமையப் பெற்றிருக்கின்றபோதும், இதில் வர்த்தக நடவடிக்கையில் ஈடுபடும் வர்த்தகர்கள் தமது பொருட்களை பாதுகாப்பாக வைத்து எடுப்பதற்கு அறைகள் கட்டப்படாத நிலையில் பாரிய சிரமங்களை எதிர்கொண்டு வந்தனர்.
இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து தருமாறு வர்த்தகர்கள் கோரிக்கை விடுத்துள்ள போதிலும், அதற்கு எவரும் செவி சாய்க்காத நிலையில் குறித்த வர்த்தகர்கள் தமது வர்த்தக நடவடிக்கைகளை கைவிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

இதன்காரணமாக, குறித்த பொதுச்சந்தை பாழடைந்த நிலையில் காணப்படுவதாகவும், இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துத்தருமாறும் அப்பகுதி வர்த்தகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மன்னார் வர்த்தகர்கள் கோரிக்கை -மூடப்பட்டுள்ள பொதுச்சந்தையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை... Reviewed by Author on January 11, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.